Header image alt text

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 7,765 முறைப்பாடுகள் பதிவு-

4இந்த வருடத்தின் (2013) இதுவரையான காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 7,765 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகளவிலான முறைப்பாடுகள் பொலிஸார் தொடர்பில் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வி அமைச்சு மற்றும் அரச நிறுவனங்கள் குறித்தும் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் 1996 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். அதற்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய வீட்டுத் திட்டம்-

3இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் வட கிழக்குப் பகுதிகளில் 2013ம் ஆண்டு இலங்கையரசின் ஒத்துழைப்புடன் 10250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யுத்தத்தால் அகதியானவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 43000 இந்திய வீட்டுத் திட்டத்தில் 10184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் யாழ். மாவட்டத்தில் 1832 வீடுகளும் 3090 வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் 3540 வீடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 1074 வீடுகள் மன்னார் மாவட்டத்திலும் 648 வீடுகள் வவுனியா மாவட்டத்திலும் 66 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 100 வீடுகள் நவீனமயப்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் 2,50,000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. 7.8 மில்லியன் ரூபா பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வீட்டுத்திட்டப் பணிகள் 2012 ஒக்டோபர் 2ம்திகதி ஆரம்பிக்கப்பட்டது. 2014ம் ஆண்டில் 16,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்த்துள்ளோம். 2015ம் ஆண்டில் 17,000 வீடுகளை கட்டிமுடிக்க எதிர்பார்த்துள்ளோம் என அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர்ப் பட்டியல் இன்று உறுதிப்படுத்தல்-

62013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களால் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் 2013ஆம் ஆண்டுக்கான பெயர்ப்பட்டியலின் முதலாவது பிரதியை நாளைமுதல் வாக்காளர்கள் பார்வையிட முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலின் இறுதி அச்சுப்பிரதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் வெடிப்புச் சம்பவம்-

யாழ்., ஏழாலைப் பகுதியில் குப்பையினை எரித்தபோது அதனுள் இருந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. யாழ்., ஏழாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தனது காணியிலுள்ள பாழடைந்த கிணற்றினை துப்புரவு செய்தபோது குப்பைகளை வெளியில் எடுத்து எரித்தநிலையில் அதற்குள்ளிருந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள சுன்னாகம் பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மங்கள சமரவீர வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு-

5ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு சொந்தமான பாணந்துறை பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இவ்வாறாக பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றுப் பகல் வேளையில் குறித்த வீட்டினுள் கொள்ளையர்கள் நுழைந்ததாக மங்கள சமரவீர முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகுhப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதவாச்சி – மன்னார் வீதியில் இளைஞன் சடலமாக மீட்பு-

kaiமதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள மைல் கல்லுக்கருகில் நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றுமாலை 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்த இந்நபர் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சீப்புகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28வயதான ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

வடக்கில் மீண்டும் கரும்பு உற்பத்திக்கென காணி சுவீகரிப்பு-

கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71ஆயிரத்து 716 ஏக்கர் காணிளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராயன்குளம், நயினாமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது Read more

புத்தாண்டு செய்தி – 2014

Posted by plotenewseditor on 31 December 2013
Posted in செய்திகள் 

புத்தாண்டு செய்தி – 2014

edcaமலரும் புத்தாண்டில் தழிழ் மக்கள் மனங்களில் மகிழ்வான எண்ணங்கள் மலரவேண்டும்,
மகத்தான சாதனை பல பல பார் அறிய படைத்திட்ட எம் இன வரலாற்றை வழிகாட்டியாக கொண்டு எம் பயணம் இனி தொடர வேண்டும்.

எம் இனத்தைச் சூழ்ந்துள்ள அரக்கு ஆட்சி அகல வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு, இப்புத்தாண்டில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

திருமதி நா.ஜங்கரன்,
தவிசாளர்
வலி மேற்கு பிரதேசசபை

வலி தெற்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டுப் போட்டி-

v4v3யாழ். வலி தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்தும் தாச்சு விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்றுமாலை உடுவில் உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. வலி தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு.விஜிதரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தாவடி சிறீ காளியம்பாள் விளையாட்டுக் கழகத்திற்கும், தையிட்டி வள்ளுவன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் தாச்சி இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் வள்ளுவன் விளையாட்டுக் கழகம் 6இற்கு 2என்கின்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியடைந்து சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. ஆனோல்ட் மற்றும் வடமாகாண தாச்சி விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு. சண்முகலிங்கம், சுன்னாகம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதிப்போட்டி மற்றும் அதையொட்டிய நிகழ்வுகளில் ஊர்ப் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

v2v7v1v8

v9v10v5v11

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் அவசர தொலைபேசி சேவை அறிமுகம்-

dகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அவசர தொலைபேசி சேவையொன்றினை அறிமுகம் செய்துள்ளது. 1962 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடியும் என தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி சேவையின் ஊடாக கடவுச்சீட்டு உள்ளிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்கள்-

cவடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படும். நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதுடன் இப்பணிகளை 2015இல் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. படகுகள் நங்கூரமிடல் களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையின் சகல மீன்பிடித் துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சு கூறியுள்ளது.

சென்னை பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவ பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை-

bஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி சென்னையில் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தேசிய மீனவர் பேரவையின் பொதுச் செயலாளர் இளங்கோவன் தெரிவித்திருந்தார். Read more

இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது-

navneethamஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2014ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார். நாடுகளின் பிரிவு அட்டவணையின்போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ் அறிக்கை விவாதத்திற்காக எடுக்கப்படும்போது இலங்கை அரசின் விமர்சனங்களும் கருத்துக்களும் கோரப்படவுள்ளன. 25வது மனித உரிமைகள் ஆணையக அமர்வுகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றன. இறுதிநாளான மார்ச் 28ஆம் திகதி யோசனைகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஏற்கனவே இந்த அறிக்கை வாய்மூலம் சமர்ப்பிக்கப்பட்டபோது மார்ச் மாதத்துக்குள் இலங்கையரசு போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்யாவிட்டால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு-

unnamed8இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் புதிய ஆண்டில் சந்திப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி இந்த சந்திப்பை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மாகாண சபைகள் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேல் மற்றும் தென் மாகாண சபைகள் இந்த மாத இறுதியில் கலைக்கப்படும் எனவும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளன.

பொலிஸாருக்கு எதிராக முறையிட தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

LK policeபொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் அறிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் 071 0361010 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவ்வாறு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய எம்.பி. ராதிகா சிற்சபேசன் இலங்கை விஜயம்-

rathiனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று இலங்கை வந்துள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார். இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை அதிகாரிகள் 450 பேருக்கு இடமாற்றம்-

jailசிறைச்சாலை அதிகாரிகள் 450பேருக்கு இடமாற்றம் வழங்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, இந்த இடமாற்றங்கள் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் ஒரே சிறைச்சாலையில் கடமையாற்றுவதாக சுட்டிக்காட்டிய அவர், சிலருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர் இராமேஸ்வரத்தில் கைது-

rameதமிழ்நாடு, இராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் இலங்கை செல்ல முயற்சித்த ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். சிலாபத்தைச் சேர்ந்த 42வயதான அருந்தவநாதன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2012இல் சுற்றுலாப் பயணியாக இந்தியா சென்று விசா காலாவதியான நிலையில் அங்குள்ள அகதி முகாமொன்றில் வசித்து வந்துள்ளார். பின்னர் சட்டவிரோமான முறையில் இலங்கை செல்வதற்குத் தீரமானித்து இராமேஸ்வரம் பகுதிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதடி விபத்தில் ஒருவர் படுகாயம்-

kaiயாழ். கைதடி பாலத்திற்கு அருகில் இன்றுகாலை 7.35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கைதடியிலிருந்து சாவகச்சேரியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் சாவகச்சேரியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த கைதடி கிழக்கைச் சேர்ந்த 23வயதான தீ.தனுறாஜ் என்பவரே விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனம் மற்றைய வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

உதயநகர் கிழக்கு, விவேகானந்தர் நகர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உதவி-

u1கிளிநொச்சி உதயநகர் கிழக்கு மற்றும் 55ஆம் கட்டை, விவேகானந்தர் நகர் ஆகிய இரு கிராமங்களையும் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்றையதினம் பிற்பகல் 4.30மணியளவில் இடம்பெற்றது. இதன்படி உதயநகர் கிழக்கு கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து 160 பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், நாகராஜா அவர்களின் தாயாரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளை பிரதிநிதிகளும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர். இந்நிகழ்வின்போது திரு நாகராஜா அவர்களின் தாயாரான தர்மலிங்கம் குஞ்சரம் (தங்கம்மா) அவர்களைப் பாராட்டி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளையினர் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் ஒன்றையும் வழஙகிவைத்தனர்.

 u4u2u3u5u6u7u8u9u19u10u11u12u13u14u15u17u18u16

தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டார்-

tamil_prabakaran_CIவிசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் இராணுவ முகாமை படம்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மகா தமிழ் பிரபாகரன் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.00 மணிக்கு சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன், புலித்தடம் தேடி என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி பின் அதனை புத்தகமாக வெளியிட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவத் துறைக்கு தெரிவான மட்டக்களப்பு மாணவி-

v1அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி விஞ்ஞான பிரிவில் பேத்தாழை பிரதேசத்தில் இருந்து பற்குணராஜா தயானி 1 யு, 2 டீ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 21வது நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார். மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையில் உயர்தரம் பயின்று பரீட்சைக்கு தோற்றியிருந்தார். இவர் ஆரம்பம் முதல் க.பொ.த. சாதாரணம் வரை பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இவர் சாதாரண தர பரீட்சையில் 8 யு, 1ஊ பெற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். பரீட்சையில் சித்தி தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி, மிகுந்த குடும்ப கஷ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்ததாகவும் ஆரம்பம் முதல் தனது பெற்றோர் தன்னை வைத்தியராக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், வறிய நிலையிலும் தன்னை கற்பித்ததாகவும் இந்த நிலைக்கு வர உதவிய பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் – வாசுதேவ-

vaasudevaஅரசியலமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணனி வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னணியின் பிரதம செயலரும் அமைச்சருமான வாசுதேவ நாணாயக்கார இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். லிபரல் ஜனநாயகத்தை மக்கள் ஜனநாயமாக மாற்றி அமைப்பதற்கான எமது பயணத்தில் முதலாவது இலக்காக அமைவது அரசியலமைப்பு எழுச்சியாகும். இதனை இந்நாட்டில் நடுத்தர வகுப்பினரின் ஆயுதமாக செயற்படுகின்ற லிபரல் ஜனநாயகமாக உள்ள ஏனைய சக்திகளின் கரங்களுக்கு செல்ல அனுமதிக்க முடியாது. ஆகவே, இந்த அரசியல் அமைப்பின் தேர்தல் முறைமை மற்றும் நிறைவேற்று அதிகாரம் என்பதற்கு பதிலாக இந்த நாட்டின் மக்களின் ஜனநாயக சிந்தனை அத்துடன் சமூக அபிவிருத்தி ஏற்படும் வகையில் புதிய ஜனநாயக மாற்றத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். இதற்காக 2014 ஆம் ஆண்டில் முகாமிட்டு செயற்படுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு நீர் விநியோகத் திட்டம், விவசாயிகள் அதிருப்தி-

v3கிளிநொச்சி, இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக கிளிநொச்சி விவசாயிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். இந்த நீர்விநியோகத் திட்டம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மாலை கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கும் திட்டத்தினால் தமது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்திற்கும், கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்துநீரைப் பயன்படுத்தும் 21 அமைப்புக்களுக்கும் இடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமது எதிர்ப்பை எழுத்துமூலம் வெளியிடுவது குறித்து விவசாயிகள் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியுள்ளனர்.

கேதீச்சரம் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்-

1(3618)மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியின் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணி நேற்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்;னம்; மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி நேற்று தோண்டப்பட்டது. மனித புதைகுழி காணப்படுகின்ற இடத்தைச்சுற்றியுள்ள வீதி உடைக்கப்பட்டு புதைகுழி தோண்டப்பட்டது. இந்நிலையில், மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதோடு அதனைச் சூழ்ந்த பகுதிகளும் தோண்டப்பட்டன. மேற்படி மனித புதைக்குழியின் மண் மற்றும் தாவரங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், விசேட பொலீஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது-

v5வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தும் பகிஸ்கரிப்பு போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்ததாக, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.கே. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் ஊடாக முல்லைத்தீவுக்கு சென்ற வவுனியா சங்கத்தை சேர்ந்த பஸ்களை பரந்தன் சந்தியில் கிளிநொச்சி பஸ் உரிமையாளர்கள் மறித்து வைத்துள்ளனர் எனவும் அவற்றை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து வவுனியா பஸ் உரிமையாளர் சங்கத்தினால் தூர இடங்களுக்கான பஸ் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இதேவேளை அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த பஸ்களில் மக்கள் முண்டியடித்து ஏறமுற்பட்டதால், வயோதிபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் நேற்றுமாலை வடமாகாண பஸ் உரிமையாளர் சங்கங்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் பகிஸ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றுமுன்தினம் வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் முறைகேடான விதத்தில் சில இடங்களுக்கு சேவை இடம்பெறுவதாகவும், இதனை தடுத்துநிறுத்த வேண்டும் எனவும் கோரி வவுனியா மாவட்டம் தவிர்ந்த வட மாகாணத்தை சேர்ந்த ஏனைய மாவட்ட தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.

தமிழ் பெண்ணின் வீடு எரிப்பு, நால்வர் கைது-

imagesCAYGW205வவுனியா சுந்தரபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த குற்றச்சாட்டில் நால்வரை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – சுந்தரபுரம் வீட்டுத் திட்ட பகுதியில் இராணுவத்தில் இணைந்துள்ள யுவதியொருவரின் வீடு நேற்று அதிகாலை இனந்தெரியாதோரால் எரியூட்டப்பட்டிருந்தது. எனினும் சம்பவம் இடம்பெற்றவேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருந்ததுடன், ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் இரவு தங்கியிருந்த நிலையில் குறித்த வீட்டிற்குள் நுழைந்து பெறுமதிமிக்க தளபாடங்கள், ஆவணங்களை தீயிட்டு எரித்துள்ளனர். அத்துடன் வீடும் எரியூட்டப்பட்டுள்ளது. தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டின் பாதிக்கப்பட்ட வீட்டார் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரால் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது. இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் விளையாட்டுப் போட்டி ஆரம்பித்து வைப்பு-

unnamedயாழ்ப்பாணம் வலி. மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி விழாவினை முன்னிட்டு நடத்தப்படுகின்ற விளையாட்டுப் போட்டிகளின் ஓர் அம்சமாக இன்றுகாலை அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்தில் உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமானது. உதைபந்தாட்டப் போட்டியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐயலிங்கம் அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், பெருமளவு பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு, பாடசாலை பிள்ளைகளுக்கு உதவி-

Sithar ploteயாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கம்பம்புலம் பாரதி பாலர் பாடசாலையில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கம்பம்புலம் பாரதி பாலர் பாடசாலைச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களையும் சித்தார்த்தன் அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் புன்னாலைக்கட்டுவன் ஈவினை ஒளிநிலா முன்பள்ளியில் வட மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் இன்றுமாலை பிரதேச மக்களுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். Read more

இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேச ஏற்பாடு-

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், கைப்பற்றப்பட்டிருக்கும் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலுவின் தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் புதுடில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது இலங்கைச் சிறையிலுள்ள 227 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 77 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர். சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், இருநாட்டு மீனவர்கள் இடையிலும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுசெய்ய மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக தமிழக அரசிடமும் இலங்கை அரசிடமும் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு-

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியிலுள்ள தோட்டக் காணியிலிருந்து எரிந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அறிந்த அயலவர்கள், சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 42வயதான வைத்தியலிங்கம் செல்வகணேசன் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலம் ரயர் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலத்திற்கு அருகில் அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பொலிஸார் மீட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குச்சவெளி வெடிவிபத்தில் சிறுவன் உயிரிழப்பு-

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவரும் காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். சம்பவத்தில் 6வயதுச் சிறுவன் றினோஸ் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார். அத்துடன் அவரின் சகோதரர்களான 10வயதான றிமாஸ் 03வயதான றினோஸா ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் வீட்டு வளவில் கிடந்த மர்ம பொருளொன்றை எடுத்து அதில் ஆணி அடிக்க முற்பட்டபோது அந்த பொருள் வெடித்ததாக கூறப்படுகின்றது.

பாடசாலையில் கொள்ளையிடப்பட்ட கனிணிகள் மீட்பு, மூவர் கைது-

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தைமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கொள்ளையிடப்பட்ட கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையுடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 26ம் திகதி காவத்தைமுனை அல் அமீன் வித்தியாலய கணினி அறை உடைக்கப்பட்டு, கணினிகள் இரண்டு கொள்ளையிடப்பட்டதாக, பாடசாலை நிறுவாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினரின் தகவலின்படி, கணினிகள் இரண்டும் மீட்கப்பட்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் தீ விபத்து, வெளியில் பாய்ந்தவர்களில் மூவர் உயிரிழப்பு-

மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிய பயணித்த ரயிலின் இயந்திரத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்புவதற்கு முயன்றவர்களில், கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் பலியானவர்கள் வரக்காபொலை, மெதவிய பகுதியைச் சேர்ந்த தம்பதியரும் வான்படையைச் சேர்ந்த ஒருவர் எனவும் அறியப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடலில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் மீட்பு-

திருகோணமலை உப்புவெளி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றநிலையில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று விபத்துக்குள்ளான இந்த இரு இளைஞர்களும், சீகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. குறித்த கடற்பகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளாலேயே இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உறவினர்களுடன் சுற்றுலாவின் நிமித்தம் இந்த கடற்பகுதிக்கு குளிப்பதற்காக சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் இஷ்ரேல் மற்றும் பாலஸ்தீன விஜயம்-

ஜனாதிபதி மகிந்த ராபக்ஷ ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு நாட்கள் விஜயமாக அங்கு செல்லும் அவர், இரண்டு நாடுகளிலும் தலா இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதன்போது ஜனாதிபதி மகிந்த, இஷ்ரேலின் ஜனாதிபதி சிமோன் பெரேஸ் மற்றும் பாலஸ்தீன் ஜனாதிபதி மொஹமூட் அபாஸ் ஆகியோரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், கலாசாரம், சுற்றுலா, மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

யாழ். தளபதி ஹத்துருசிங்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம்-

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், நிர்வாக நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க், ஆயுதப் படைப்பிரிவின் பிரதம தளபதியாகவும் Read more