Header image alt text

சாத்வீகப் போர் மீண்டும் வெடிக்கும் சம்பந்தன் குமுறல்: அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும்- யசூசி அகாசி

sambanthanaasfasfதமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நேற்றிரவு கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. Read more

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சுதந்திரமான நாடாக செயற்படுவதையே சர்வதேசம் விரும்புகிறது.-யசூஷி அகாஷி

imagesCAV34F3Gசிறுபான்மையினரின் உரிமைகள், வடக்கு மக்களின் நிலை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சுதந்திரமான நாடாக செயறபடுவதனையே சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு மக்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடும் நிலை என்பன தமிழ் தேசியக் கூட்டமைப் புடனான கலந்துரையாடலின் போது தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான விசேட தூதுவர் யசூஷி அகாஷி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல மணி நேர கலந்துரையாடலின் பின்னர் யசூஷி அகாஷி ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிபிடுகையில், Read more

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டனில் ஊர்வலம்

DSC00001_0 DSC00015மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டனில் ஊர்வலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் துஸ்பிரயோகங்களையும் கண்டித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை ஹட்டனில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. Read more