வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் விளையாட்டுப் போட்டி ஆரம்பித்து வைப்பு-

unnamedயாழ்ப்பாணம் வலி. மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி விழாவினை முன்னிட்டு நடத்தப்படுகின்ற விளையாட்டுப் போட்டிகளின் ஓர் அம்சமாக இன்றுகாலை அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்தில் உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமானது. உதைபந்தாட்டப் போட்டியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐயலிங்கம் அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், பெருமளவு பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.