எல்லையை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்வோம்- அமைச்சர் ராஜித சேனரட்ண

140113133823_fishermen_release_trincomalee_304x171_bbc_nocreditஇலங்கை கடற்பரப்பிற்குள் யார் அத்துமீறி மீன்பிடித்தாலும் அவர்களைக் கைது செய்வோம். இந்திய இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்திய மீனவர்கள் சுமார் 500 பேர்வரை இலங்கை கடற்பகுதிக்கு வந்ததாகக் கூறும் இலங்கை மீன் பிடி அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள்,  (21-01-14) 25 பேரையும் முதல் நாள்; தாங்கள் 5 பேரையும்  கைது செய்ததாகவும். அதனைத் தாம் நிறுத்தப்போவதில்லை என்றும். இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் தாம் கைது செய்வோம் பேச்சு வார்த்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லை- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ

140123144112_gotabaya_rajapaksa_batticaloa_512x288_bbcமட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக நேற்று வியாழனன்று சென்ற கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அதிகாரிகளை கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டார்.

140123144535_gotabaya_rajapaksa_batticaloa_512x288_bbc_nocreditஅண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், ‘உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்டாம்’, என்றும் நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதியுடைய தலைவர்கள் இலங்கையிலேயே பலர் இருக்கிறார்கள் என்று தான் தெளிவாக அவரிடம் வலியுறுத்தியதாகவும் . இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரால் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியுமா?’, என்று வினா எழுப்பிய அவர் தற்போது எல்லா இடமும் செல்வதாகவும், சிலர் அவருக்கு பின்னால் செல்வதாகவும் . ‘அவரிடம் சிலர் சில விடயங்களை சொல்கிறார்கள். நான் அவரிடம் எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது உங்கள் வேலை அல்ல என கூறியுள்ளேன். ராஜதந்திரிகள் ராஜதந்திர வேலைகளை மட்டும் பார்க்காமல் வேறு வேலைகள் பார்க்கிறார்கள்’, என்று கூறினார் கோட்டாபய ராஜபக்ஷ.

இந்த பயணத்தின்போது மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அவரது கவனத்திற்கு தான் கொண்டு வந்ததாகவும். அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், வழக்கு விசாரனைகளை துரிதப்படுத்துதல் அல்லது புனர்வாழ்வு வழங்குதல் போன்ற விடயங்களை அவரிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் இது தொடர்பில் சாதகமான முறையில் அவரது பதில் அமைந்திருந்தது என்றும் ஆயர் கூறினார்.

‘புலிகள் இருந்த கால கட்டத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பேச்சுவார்த்தையினூடாக மீள பெறப்பட்டுவிட்டன.

 ‘நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்வதற்கு முனைந்தால் அது தாய் நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகமாகும்’ .

‘கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட வித்தியாசமான ஒரு மாகாணமாகும். இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்வர்கள், பறங்கியர்கள் என பல்லின மக்களும் பல மொழிகளைகளைப் பேசுகின்றவர்களும் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் ஒன்றுபட்ட அபிவிருத்தியும் நல்லிணக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 2005ஆம் ஆண்டு இந்த நாட்டை பொறுப்பேற்றதிலிருந்து குறுகிய காலத்துக்குள் மக்களுக்கான சுபீட்சமும், அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை நிலை நாட்ட ஒவ்வொரு பிரஜையும் பாடுபட வேண்டும்’.

‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் கடந்த 4 வருட குறுகிய காலத்துக்குள் யுத்தத்தை முடித்து வட மாகாணத்தில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை குடியமர்த்தி, புனர்வாழ்வளித்து அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது. பல இராணுவ முகாம்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் எந்தவொரு கெடுபிடியுமின்றி சுதந்திரமாக எங்கும் சென்று வரக் கூடிய சூழல் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களை பார்க்கும் போது வட மாகாண மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 5 வீதமும், பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் 12 வீதமும், அதன் பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 45 வீதமும், கடைசியாக நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 72 வீதமும் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அச்சமின்றி வாக்களிக்கின்ற சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் ஒன்றின் போது உயிரிழப்புக்களும், பொருளாதார இழப்புக்களும் ஏற்படுவது சாதாரணமாகும். எனினும் இந்த நாடு குறுகிய காலத்திறகுள் கட்டியெழுப்பபட்டுள்ளது. பல தியாகங்களுக்கு மத்தியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்தை நாம் நிலையான சமாதானமாக நிலைபெறச் செய்ய வேண்டும்.சமாதானத்திற்கு அநீதி இழைக்க முற்படுவதானது பாரதூரமான குற்றமாகும்’ .

’30 வருட கால யுத்தத்திற்கு பின்பு இந்த நாட்டில் வீதி அபிவிருத்தி, மின்சார அபிவிருத்தி, என பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லிம்கள் பறங்கியர்கள் அனைவரும் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக சுபீட்சமாக வாழ்கின்றனர்’.

‘அண்மையில் என்னை சந்தித்த அமெரிக்க பிரஜையொருவர் நாட்டை எவ்வாறு கொண்டு செல்கிறீர்கள் என என்னிடம் கேட்டபோது எங்களுக்கு புத்தி செல்லத்தேவையில்லை, எங்களது நாட்டில் புத்திஜீவிகள் இருக்கின்றனர். எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வோம் என கூறினேன். 45 வருட அரசியல் அனுபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குண்டு அதே போன்று ராஜபக்ச குடும்பத்திற்கு 75 வருட அரசியல் ஈடுபாடு உண்டு. இந்த அனுபவங்களை கொண்டு இந்த நாட்டை கொண்டு செல்கின்றோம். எமது தூர நோக்கு சிந்தனை மஹிந்த சிந்தனையாகும்.

இந்த நாட்டின் கௌரவத்துக்கு கரி பூசி நாட்டிற்கு அபகீர்த்தியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் தமது மத கடமைகளை செய்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள என பிரசாரம் செய்யப்படுகின்றன. அணமையில் இலங்கை வந்த வெளிநாட்டு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் அவர் தங்கியிருந்த போது தொழுகைக்கான பாங்கு சொல்லும் சப்தம் கேட்டுள்ளது. வெளிநாட்டுகளில் இலங்கைக்கு எதிராக செய்யப்படும் பிரசாரம் பொய் என்பதையும் இங்கு அனைவருக்கும் பூரண மத சுதந்திரமுண்டு என்பதையும் அறிந்தாக கூறியுள்ளார்.

இங்கு அனைவரும் தமது மத கடமைகளை மேற் கொள்வதற்கான அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பில் சேரிப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக 20,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 500 வீடுகள் அமைக்கப்பட்டு கூடுதலான வீடுகள் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவதாக தான் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.கொழும்பிலிருந்து முஸ்லிம்களையோ, தமிழர்களையோ நாம் துரத்தவில்லை.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களுமுண்டு. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை உட்பட அனைத்து அபிவிருத்திகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. என மட்டக்களப்பு, ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.