Header image alt text

அமெரிக்கத் தூதுவர் புதுமாத்தளன் பிரதேசத்திற்கு விஜயம்- 

ref vanni vijayam (2)யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த ஐ.நா அலுவலகம் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன் வன்னியில் ஐ.ஓ.எம் எனப்படும் புலம் பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பின் அலுவலகத்தில் வைத்து முன்னாள் புலி உறுப்பினர்களையும் அவர் இன்று சந்தித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தார். இதேவேளை வட மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனுக்கும் ஸ்டீவன் ஜே ரெப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரையும் அவர் நேற்று சந்தித்திருந்தார்.

மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி திறப்பு-

mallagamneethimantram thirappu (3)neethimantram thirappu (6)யாழ். மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இன்றுமுற்பகல் 11.30 மணியளவில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் அ.பிறேம்சங்கர், மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகளான சி.சதீஷ்கரன், மேலதிக நீதிபதி மொகமட் ஆகியோர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மேளவாத்தியம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, மல்லாகம் மகா வித்தியாலயம், உடுவில் மகளிர் கல்லாரி மாணவ மாணவிகளின் மேலைத்தேய பேண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அத்தோடு தேசியக்கொடி ஏற்றல், நினைவுப் பலகை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரர் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

லோகோஸ் ஹோப் நடமாடும் புத்தகக் கண்காட்சி கப்பல் திருமலையில்-

clogos hope kappal (2)லோகோஸ் ஹோப் என்னும் பெயருடைய உலகின் மாபெரும் நடமாடும் புத்தகக் கண்காட்சி கப்பல், திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தினை அடைந்துள்ளது. இன்றுபிற்பகல் 3 மணியளவில் வந்த இக் கப்பலில், 60 உலக நாட்டைச் சேர்ந்த 400 உதவியாளர்கள் உள்ளனர். 9 தட்டுக்களைக் கொண்ட இக்கப்பலில் 5000 வகையான புத்தகங்களும் உள்ளன என இதன் இணைப்பாளர் கிறிஸ்தோபர் தெரிவித்துள்ளார். இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ஆவார். எதிர்வரும் 16ம் திகதிவரை குறித்த கப்பல் திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தங்கியிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தல்-

2Sri_Lanka013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் இந்த பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் 2013ஆம் ஆண்டுக்கான பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான பெயர்ப்பட்டியல் கடந்த 31ஆம்திகதி உறுதிப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை இந்திய கைதிகள் பரிமாற்றம்-

sri &indiaஇலங்கையுடன் பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழ், இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரியப்படுத்தியிருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 275க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த 223 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை புரிந்துணர்வின் அடிப்படையில் பறிமாற்றிக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக டீ.ஆர்.பாலு தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து – லங்கா உடன்படிக்கையை மதிக்க வேண்டும்-சல்மான் குர்சித்-

salman kursidஇந்தியாவில் காணப்படுகின்ற அதிகாரப் பகிர்வினை ஒத்ததாக இலங்கையிலும் அதிகாரப்பகிர்வுகள் வழங்கப்படும் என, இலங்கையரசு உறுதியளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்து – இலங்கை உடன்படிக்கைக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என இந்தியா, இலங்கையிடம் கோரி வந்துள்ளது. 13ஆம் திருத்தச் சட்டமே இலங்கையில் உள்ள அனைத்தின மக்களும் சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்தியாவில் காணப்படுகின்ற கட்டமைப்பின் அடிப்படையில் இலங்கையில் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ள, இலங்கை உறுதியளித்துள்ளது என்றார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்-

cஇந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களை இந்த மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை, பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக நல்லெண்ண அடிப்படையில் தமிழகம் மற்றும் ஆந்திரா சிறைச்சாலைகளிலுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சுதர்ஷன நாச்சியப்பன் ‘தி இந்து’விற்கு கூறியுள்ளார். அதேபோல், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி நீதிமன்றம் திறந்து வைப்பு-

யாழ். சாவகச்சேரியில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று திறந்துவைத்து திரைநீக்கம் செய்துள்ளார். சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர். இதில் மாவட்ட நீதிமன்றமும் நீதவான் நீதிமன்றமும் இயங்கவுள்ளன. அத்துடன், இலவச சட்ட உதவி மன்றம், சமுதாய சீர்திருத்தப் பிரிவு என்பனவும் இயங்கவுள்ளன. மேலும், இக்கட்டிடத் தொகுதியின் பின்பகுதியில் 02 நீதிபதிகளின் வாசஸ்தலங்களும் ஒரு அரச சட்டத்தரணியின் வாசஸ்தலமும் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்நீதிமன்ற கட்டிடத்தொகுதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 159 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விண்வெளி செல்லவுள்ள தமிழ் மாணவி-

tamil maanavi (1)tamil maanavi (4)விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன். இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவர் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-

protest_4கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்காவின் போர்க்குற்ற விசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சி ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய விமானப்படை தளபதியாக கோலித குணதிலக்க நியமனம்-

இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம்-

vasandaசிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்ட ஐந்தாண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டக்கப்பட்டது. அன்னாரது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட அஞ்சலி வைபவமொன்று கொழும்பு பொரளை பொது மயானத்தில் அமைந்துள்ள அவரது சமாதியின் முன்பாக இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க 2009ஆம் ஆண்டு, ஜனவரி 8ம்திகதி காலை தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் கல்கிஸ்சையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதனை நினைவுகூறும் பொருட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள், பொரளையில் உள்ள லசந்தவின் சமாதியின் முன் உருவப் படமொன்றை வைத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செய்துள்ளனர்.

கொழும்பில் காணாமல்போன வர்த்தகர் வீடு திரும்பினார்-

imagesCA4W14EAநேற்று முன்தினம் காணாமற் போனதாக கூறப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 52) என்ற வர்த்தகர் இன்று வீடு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு, மெயின் ஸ்ரிட் பகுதியில் இறக்குமதி வியாபரத்தில் ஈடுபட்டுவந்த சங்கரலிங்கம், வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்காக நேற்று முன்தினம் மதியம் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரிவில்லை எனவும் அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  தான் கடத்தப்பட்டமை தொடர்பில் சங்கரலிங்கம் கூறுகையில், Read more

கல்விளானில் மாலைநேர பஜனைப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு-

unnamed (8)யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி அவர்களது வலி மேற்கு பிரதேசத்தில் 100 மாலைநேர பஜனைப் பாடசாலைகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இரண்டாவது பாடசாலை சுழிபுரம் கல்விளான் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றுமாலை (07.01.2014) 5மணியளவில் சுழிபுரம் கல்விளான் காந்திஜி சனசமூகநிலையத்தில் காந்திஜி சனசமூகநிலைய தலைவர் ப.அன்னலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சபா வாசுதேவ குருக்கள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ..சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

இந்திய வீட்டுத்திட்ட மூன்றாம் கட்டத்தில் மலையக மக்களுக்கும் பயன்-

3இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். இதில் மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டமும் அடங்கும் என இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது. இரண்டாம் கட்டத்தில் வட கிழக்கில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இவ்வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டப் பணியில் 16,000 வீடுகள் கட்டப்படவுள்ளன. அதில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நேரடி பயன்பெறுவர். இலங்கை அரசுடன் ஆராய்ந்து தெளிவாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு ஐந்து குழந்தைகள் துஸ்பிரயோகம்-

imagesCAVGQCEMஇலங்கையில் நாளொன்றுக்கு ஐந்து பெண் குழந்தைகள் வரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் 84 வீதமான பாலியல் வன்கொடுமைகளால் 18 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளைகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக கொழும்பு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் தேவிகா ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இணையம் கைத்தொலைபேசி போன்றவற்றின் பாவனையின் காரணமாக பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆபாச இணையதள பயன்பாட்டில் இலங்கை உலக அளவில் முன்னணி வகிக்கும் நிலை ஏற்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். ஆகவே துஸ்பிரயோகம் ஏற்படுவதை குறைக்க பெற்றோர்கள் பிள்ளைகளில் கூடிய கரிசனை காட்ட வேண்டும் என பேராசிரியர் தேவிகா ஜயதிலக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரந்தர நியமனம் கோரி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு-

vavuniyaநிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியாவில் நேற்று அமைய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிக்குளம், நெடுங்கேணி பிரதேச சபை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் தமது அலுவலகங்களின் முன்னால் நின்று இந்தப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா நகரசபையின் முன்பாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்க வவுனியாக் கிளையினர் மூன்று முக்கிய கோரிக்கையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் சுமார் 120பேர் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் தமது அலுவலகத்தின் முன்பாகத் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நெடுங்கேணி, செட்டிக்குளம் பகுதிகளில் இயங்கும் பிரதேச சபைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தத்தமது காரியாலயங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேல், தென் மாகாணங்களில் பிரபலங்களை களமிறக்க முஸ்தீபு-

பதவிக்காலம் முடியும் முன்னர் மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ள நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன பிரபல்யங்களையும் தேசிய மட்ட அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த ஆயத்தம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தபாலத்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகள் மல்ஷா குமாரதுங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடுவார் என தெரியவந்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மற்றும் விசேட செயற்றிட்ட அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் அரசாங்கப் பட்டியலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவைக்க திட்டமிடுகின்றனர். இம்முறை பல புதுமுகங்களை அறிமுகம் செய்யப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியும் சில புதியவர்களை போட்டியில் நிறுத்தவுள்ளதாக கூறியுள்ளது.

இலங்கையர்களுக்கு இந்தியப் பிரஜா உரிமை –

raviஇந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு இந்தியப் பிரஜா உரிமை வழங்க வேண்டும் என கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ.ஸ்ரீ ரவிசங்கர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இதன் முதல்கட்டம் பாண்டிச்சேரியில் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை சகல இன மக்களிடமும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல வருடங்களாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.

15ஆயிரம் சாரதிகள் தவறிழைப்பு-

கடந்த ஆண்டு போக்குவரத்து நடவடிக்கைகளின்போது தவறிழைத்த 15,000 சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில், இலக்கமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தினால் குற்றவாளி என அடையாளம் காணப்படும் சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இலக்கமிடப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எச்.எஸ்.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்துதல், விபத்துக்கள் இடம்பெறும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இலக்கமிடும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி 24 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படவுள்ளன.

கொழும்பில் வர்த்தகரை காணவில்லையென முறைப்பாடு-

LK policeகொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வர்த்தகர், நேற்று முன்தினம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது மனைவியினால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு பிரதான வீதியிலுள்ள கிழங்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய அருணாசலம் சங்கரலிங்கம் என்ற வர்த்தகரே காணாமற்போயுள்ளார். கடமை நிமித்தம் நேற்று முன்தினம் அரச வங்கியொன்றுக்கு சென்ற குறித்த வர்த்தகர் பணத்தை மீளப் பெற்றுள்ளதாகவும், அதன்பின்னரே அவர் காணாமற் போயுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணதண்டனை இருபது ஆண்டு சிறைத் தண்டனையாகிறது-

law helpமரணதண்டனை இனி வரும் காலங்களில் இருபது ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் நீதி அமைச்சருடன் கலந்தாலோசித்து மரண தண்டனையை இனிவரும் காலங்களில் இருபது ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் சுமார் 500பேர் இலங்கைச் சிறையில் மரண தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

கேதீச்சரம் மனித புதைகுழியில் இருந்து 26 எலும்புக்கூடுகள் மீட்பு-

gமன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள மனித புதைகுழியிலிருந்து நேற்றுவரை 26 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து டிசம்பர் 20ஆம் திகதியில் இருந்து கடந்த 4ஆம் திகதி வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னத்தின் உத்தரவிற்கமைய சட்ட வைத்திய நிபுணர் டி.எல் .வைத்திய ரெட்ன ஆகியோர் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது புதிதாக 8 மனித எழும்புக்கூடுகள் நேற்று மீட்கப்பட்டன.

யாழ்ப்பாண கல்லுரியின் புதிய அதிபருக்கு வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் வாழ்த்து-

jaffna collegeவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாண கல்லூரியின் 17ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள அருட்திரு கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் அவர்களை அகம்மிக மகிழ்ந்து பாராட்டுகின்றேன். இறைபணியினையும் கல்விப்பணியினையும் ஒருங்கே இணைத்துச் சென்று இனிவரும் காலங்கள் எமது தழிழ் சழூகத்திற்கு இனியவையாக மாற்றமுற நற்றமிழ் மாணவர் சமூகத்தை நற்பண்புடன் கட்டிவளர்த்து காலத்தின் பணியதனை கண்ணியமாய் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துகின்றேன், வணங்குகின்றேன். என்றும் மக்கள் பணியில்,
திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர் – வலி மேற்கு பிரதேச சபை

ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு புதிய நீதிமன்ற கட்டிடம்-

courtஇதுவரை யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றம் தனியார் வீடு ஒன்றில் இயங்கி வந்தது தற்போது ஊர்காவற்றுறை இறங்குதுறைக்கு அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் மிக பிரமாண்டமான கட்டிடம் வசதி வாய்ப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டிட திறப்புவிழா எதிர்வரும் 09.01.2014 அன்று இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் நீதி அமைச்சர், நீதி அமைச்சின் செயலர், பிரதம நீதியரசர், சட்டமாஅதிபர் உட்பட பல அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ஆயினும் முன்னாள் நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமான சீ.வீ.விக்னேஸ்வரனுக்கோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கு பிரதேச மக்களை விழிப்புடன் இருக்குமாறு தவிசாளர் வேண்டுகோள்-

Valikamam_West_Divisional_Councilயாழ் மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் தீவகப்பகுதிகளில் இன்றையதினமும் இருள்சூழ்ந்த காலநிலை நிலவிவருகின்றது. இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் கரையோர பகுதிகளில் அசாதாரண காலநிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கரையோரப்பகுதி மக்களை மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

புல்மோட்டையில் மினி சூறாவளி: வீடுகள் பல சேதம்-

untitledநாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான மழை மற்றும் அசாதாரண காலநிலை காரணமாக திருமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் மினி சூறாவளி நேற்றிரவு வீசியுள்ளது. இதனால் ஜின்னாபுரம் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வீட்டின் கூரைகள் காற்றில் அள்ளுண்டதுடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கடும் மழை-

untitledதாழமுக்கம் காரணமாக வவுனியா மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இன்றுகாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவில் 188 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. புத்தளத்தில் 68 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருகோணமலையில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திருமலை மாணவர் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு-

five students trincoதிருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஜந்து மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 13பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜீலை மாதம் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது நீதவான் ரீ. சரவணராஜா வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.

ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம்- எம்.கே.சிவாஜிலிங்கம்-

mk sivajilingamயாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழுவின் பின்னணியில் இராணுவம் செயற்படுகிறதென தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த 9பேர் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே சிவாஜிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆவா குழுவினருக்கு கைக்குண்டுகள் எவ்வாறு கிடைத்தன என பல கேள்விகள் எழுகின்றன. சாதாரண மக்கள் கைக்குண்டு வைத்திருப்பது என்பது சாத்தியப்பாடானது அல்ல. அந்த வகையில், இந்த பாதாளக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இக் கைக்குண்டுகள் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என அவர் கூறியுள்ளார்.

யாழில் ‘ஆவா’ கொள்ளைக் கோஷ்டியினர் கைது-

ava group 01யாழில் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த கொள்ளைக் கும்பல் ஒன்று கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், உட்பட உயிராபத்து ஏற்படுத்த கூடிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிறீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி தெரிவிக்கையில்,
கடந்தவாரம் கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யபட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் மூலமே இக்குழுவை நாம் கைது செய்துள்ளோம். சந்தேகநபர் தந்த வாக்குமூலத்தினை அடுத்து எனதும் கோப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ். ஏக்கநாயக்கவினதும் தலைமையிலான பொலிஸ் குழு ஏனையவர்களை கைதுசெய்தது. Read more

வடக்கு முதல்வரின் பெயரில் போலி நியமனக் கடிதங்கள்-

npc2_CIவடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் நேற்று யாழ்; தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து 15ற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை முதலமைச்சரால் வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறான நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண சபையால் நடத்தப்படவில்லை என்றும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மன்மதராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இணைப்புச் செயலாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய செ.தனுபன் என்பவரே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார். குறித்த 15 பேருக்கும் வவுனியாவில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமனம் வழங்குவார் என முன்னர் மோசடி நபர் தெரியப்படுத்தியுள்ளார். ஆனாலும் அது இடமாற்றம் செய்யப்பட்டு நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குத் தெல்லிப்பழையில் நடைபெறும் என அவர் பின்னர் கூறியுள்ளார். நேற்றுப் பிற்பகல் அங்கு சென்ற 15ற்கும் மேற்பட்டவர்களுக்கு குறித்த நபர் வேறு சிலருடன் இணைந்து கடிதங்களை வழங்கியுள்ளார். Read more

லயன் எயாரில் பயணித்தோரை அடையாளம் காண ஏற்பாடு-

lion air14 வருடங்களுக்கு முன் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் லயன் எயார் அன்டனோவ் 24 ரக உள்நாட்டு பயணிகள் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பில் கண்டறிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ் நகரசபை மண்டபத்தில் இந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்போது 72 ஆடைகள், அடையாளம் காண்பதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதனால், லயன் எயார் விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குறித்த இரு தினங்களில் யாழ். விளையாட்டரங்குக்கு வருகைதந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழில் வாக்குமூலம் பதிவு செய்யாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை-

LK policeதமிழ் மொழியில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யத் தவறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அந்த உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடமாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா இன்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் தமிழ்மொழியில் பதிவு செய்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையின் பிரகாரம், பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாக்குமூலத்தினை தமிழில் பதிவு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவித்த அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயர், திகதி, முறைப்பாடு பதிவு செய்யச்சென்ற நேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வடமாகாண பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்-

stephan je refபோர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் இலங்கை வந்துள்ளார் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்த தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப் இலங்கையில் பல தரப்பினரையும் சந்திக்கவுள்ளார் இதன்போது குடியியல் அமைப்புக்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்று முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ரெப் இலங்கை வந்து சென்றிருந்தார்.

பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பாக பிரதிவாதியை கைது செய்ய உத்தரவு-

baratha laksmanபாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் முதலாவது பிரதிவாதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முதலாவது பிரதிவாதி ஆஜராகியிருக்கவில்லை. வழக்கின் மூன்றாவது பிரதிவாதி சுகயீனமுற்றுள்ளதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் 11ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா எம்.பி பாராளுமன்றில் இன்று ஆஜராகியிருந்தார். வழக்கு பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போகம்பறை சிறைக் கைதிகளின் போராட்டம் நிறைவு-

jailகண்டி போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கைதிகள் தமது பேராட்டத்தை கைவிட்டுள்ளனர். மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உள்ளிட்ட 27பேர் கூரைமீதேறி கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை இலகுப்படுத்துமாறு இவர்கள் கோரியிருந்தனர்.

யாழில் பாலியல் கொலைகள் அதிகரிப்பு-

Jaffna hospitalயாழ் மாவட்டத்தில் பாலியல் தொடர்பான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சாட்சிகளை இல்லாது செய்யும் பொருட்டே இவ்வாறான கொலைகள் இடம்பெறுகின்றன என சட்ட வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை-

4ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இம்மாத இறுதியளவில் அரசாங்கத்திற்கு கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தமது ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மீனவர்களின் தொழில் பாதிப்பு-

see3மன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம் முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசந்துரையை கடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் இன்றுகாலை கடற்தொழிலுக்குச் செல்லவில்லை. மன்னாரில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதோடு கடற்காற்;றும் வீசி வருகின்றது. இந்நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்களை மறு அறிவித்தல்வரை கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அனர்;ந்த முகாமைத்துவ பிரிவினர் அறிவித்தல் வழங்கியுள்ளனர். இதேவேளை தொழிலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை போராட்டம்-

sushma suvarajஇராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்குவதைக் கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கடல் தாமரை என்ற பெயரில் ஜனவரி 31ஆம் திகதி நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு பாஜக லோக்சபா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குவார்; என பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனக்கு பக்க பலமாக இருந்த ஒரே காரணத்திற்காக தமிழர்களை மொத்தமாக இலங்கை அரசு கொன்று குவித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

நோர்வே பிரஜை கடலில் மூழ்கிப்பலி-

imagesCABRDM0Dகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவட்டுன கடலில் குளித்துக்கொண்டிருந்த நோர்வே பிரஜை கடலில் மூழ்கிப்பலியாகியுள்ளார் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதான நோர்வே நாட்டு பிரஜையின் சடலம் கராப்பிட்டி வைத்தியசாலையில் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹபரண ஹோட்டலில் இருந்து ரஸ்ய பிரஜையின் சடலம் மீட்பு-

dead.bodyமாத்தளை மாவட்டத்தின் ஹபரண பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ரஸ்ய நாட்டுப் பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 65 வயதுடைய ரஸ்ய பிரஜையே இன்றுகாலை தனது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சடலம் ஹோட்டல் அறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஹபரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாகனங்களில் இருந்து விஐபி, விவிஐபி என்ற பெயர் நீக்கம்-

vip vehicleவாகனங்களில் விஐபி மற்றும் விவிஐபி என பெயர் பொறிக்கப்பட்டுவதை பொலிஸார் தடை செய்துள்ளனர். வீதிகளில் விஐபி மற்றும் விவிஐபி என பெயர் பொறிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து அந்த பெயர்களை அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணசபை விவகாரத்தில் ஜனாதிபதி அக்கறை செலுத்த வேண்டும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

Sithar ploteவடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துப் பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு வரவேற்கத்தக்கது.

ஆனால், ஜனாதிபதியும் வடமாகாண சபை விவகாரத்தில் முழுமையாக அக்கறை செலுத்தி அதன் சீரான செயற்பாட்டுக்கு உதவ வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வீரகேசரிக்கு மேலும் தெரிவிக்கையில், Read more

சேமமடு பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

Chemamaduவவுனியா, சேமமடு பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யுத்தத்திற்குப் பின்னரான மீள்குடியேற்றக் கிராமமான சேமமடு (யூனிட்1, யூனிட்2) பகுதிகளின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. விஜயகுமார் (லயன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளார். Read more

ஐந்து மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு-

sunamijaffnaதிருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கடற்கரையில் இருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை, வடபகுதியிலும், வடக்கு கடற்பரப்பிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய புத்தளம் தொடக்கம் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாகவும், அபாயகரமாகவும் அமையுமென குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களின் நிலவரங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது-இரா.சம்பந்தன்-

tamilnaduஇந்தியா சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை சந்தித்துள்ளார். இசசந்திப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இதனிடையே, வட மாகாண சபை தேர்தலுக்கு பின்னரான நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் அவர்களால் தெளிவுப்படுத்தப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுமாத்தளனில் மனித எலும்புக்கூடு மீட்பு-

fமுல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் மலசலகூடமொன்றை அமைப்பதற்காக அங்கு குழியொன்றை வெட்டும்போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைதிகளின் சம்பளம் அதிகரிப்பு-

jailகைதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல் அதிகரிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளொன்றுக்கு ஒரு ரூபா சம்பளம் பெறும் கைதிக்கு 60 ரூபாவும், 1 ரூபாய் 50சதம் பெறும் கைதிக்கு 75 ரூபாவும், 2 ரூபாய் 50 சதம் பெறும் கைதிக்கு 100 ரூபாவும் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். தச்சன், மேசன், பேக்கரி, அச்சு இயந்திரம் மற்றும் சவர்க்கார உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கே சம்பளம் வழங்கப்படுகின்றது. அவ்வாறானவர்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைக் கடலில் தத்தளித்த ஆஸி பிரஜைகள் மீட்பு-

see3முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று சிறிய படகொன்றில் தத்தளித்துக்கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிலையம் குறிப்பிட்டுள்ளது. கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் கூறியுள்ளார். வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும்; இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனர்த்தங்களை எதிர்கொள்ளத் தயார் – பிரிகேடியர் ருவன் வணிகசூரிய-

ruwan wanigasuriyaதாழமுக்க தாக்கத்தினால் அனர்த்த நிலைமை ஏற்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்வதற்காக முப்படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைமை ஏற்பட்டால் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் வகையில், படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தற்போதைய வானிலை குறித்து கவனம் செலுத்தி, இடர் முகாமைத்துவ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க இராணுவம் முன்வந்துள்ளது, கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான நிவாரணங்களை இராணுவத்தினர் வழங்குவார்கள் என இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். அதேபோன்று விமானப் படையினர் மற்றும் கடற்படையினரும் அவசர நிலையை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

52 ஆவது படைத்தலைமையகம் எதிர்வரும் வாரம் விடுவிக்கப்படுமென அறிவிப்பு-

mahinda hadurusingheயாழ்.மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் என இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கட்டளைத்தளபதி என்ற கடமையில் இருந்து நாளைய தினம் விடுபட்டு இராணுவ தலைமையகத்திற்கு செல்லவுள்ள ஹத்துருசிங்கவிற்கு பிரியாவிடை வைபவம் நேற்று வசாவிளானில் நடைபெற்றது அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இராணுவ தேவைகளுக்காக பொதுமக்களுடைய சொத்துக்கள், வீடுகள் மற்றும் நிலங்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இதேவேளை எதிர்வரும் 8ஆம் திகதி வரணியிலுள்ள 52 ஆவது படைத்தலைமையகம் முற்றாக விடுவிக்கப்படவுள்ளதுடன் உரிமையாளர்களிடம் நிலங்கள் மற்றும் வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன என அவர் கூறியுள்ளார்.

தெல்லிப்பழை யூனியன்கல்லூரி மாணவி மாணவர் படையணியில் தெரிவு-

studentஇலங்கையின் மாணவர் படையணியின் பெண்களுக்கான மாணவர் படையனியில் இருந்து பங்களாதேசிற்கு பயிற்ச்சிக்காக சென்ற மாணவர் படையணிக் குழுவில் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவி சஸ்மிதா ஜெகதீஸ்வரன் இடம்பெற்று கடந்தவாரம் பயிற்சியினை நிறைவு செய்துள்ளார். இலங்கையில் மாணவர் படையணியுள்ள 45 பாடசாலைகளில் இருந்து 10 மாணவர்கள் இப்பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவியாக இவர் தெரிவாகியுள்ளார். இப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டமை தொடர்பாக சஸ்மிதா கருத்து தெரிவிக்கும்போது ‘மாணவர் படையணியின் பயிற்சியானது நன்மையளித்ததுடன் தலைமைத்துவ ஆற்றல், பயம், கூச்சம் அற்றநிலை விடயங்களினை பொறுப்பெடுத்து செயற்படுகின்ற ஆற்றல் எல்லோரிடமும் சகஜமாக பழகும் திறன் என்பவற்றினை பெற்க்கூடியதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.