Header image alt text

சர்வதேச நிபுணர்குழு இறுதி செய்யப்படவில்லை என அறிவிப்பு-

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தவுள்ள சர்வதேச நிபுணர்கள் குழு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையக பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விசாரணைக் குழுவின் நிபுணர்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அது குறித்த உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் 12 பேர் அங்கம் வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மேலதிகமாக இந்த குழுவுக்கான இணைப்பாளர் ஒருவரும், இரு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்டி அத்திசாரி நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மார்டி அத்திசாரி தமது சமாதான செயற்பாடுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாணந்துறையில் பிரபல வர்த்தக கட்டடம் தீக்கிரை-

கொழும்பு புறநகர் பாணந்துறை பகுதியிலுள்ள பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையாகி உள்ளது. இந்த தீ சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீக்கிரையான இந்த வர்த்தக கட்டடம் நோலிமிட் முன்னணி ஆடை விற்பனை நிறுவனத்துக்கு சொந்தமானது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு இரு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை இந்த ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் தீப்பரவல் இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.

சர்வதேச நிபுணர்குழு இறுதி செய்யப்படவில்லை என அறிவிப்பு-

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தவுள்ள சர்வதேச நிபுணர்கள் குழு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையக பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விசாரணைக் குழுவின் நிபுணர்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அது குறித்த உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் 12 பேர் அங்கம் வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மேலதிகமாக இந்த குழுவுக்கான இணைப்பாளர் ஒருவரும், இரு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்டி அத்திசாரி நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மார்டி அத்திசாரி தமது சமாதான செயற்பாடுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தல்-

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை வகுப்பின்போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிக உரிமையும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கக்கூடிய 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த விடயத்தில் இலங்கை முனைப்பு காட்டவில்லை. கடந்த 10 வருடங்களாக வெளிநாடுகள்மீதான இந்தியாவின் செல்வாக்கு குறைந்து காணப்படுவதே இதற்கான காரணமாக இருக்கமுடியும். ஆனால் தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு, சிறந்த அரசியல் ஒழுக்கத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது. எனவே தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் விடயத்திலும் கவனத் செலுத்தப்பட வேண்டும். அதேநேரம் இலங்கையுடன் இராணுவ மற்றும் வர்த்தக தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டு, சிறந்த நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கை அமைய வேண்டும் என அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் பள்ளிவாசல்மீது தாக்குதல்-

யாழ். நாவாந்துறை எம்.ஓ வீதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசல்மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், பள்ளிவாசலின் 5 யன்னல் கண்ணாடிகள் சேதடைந்துள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரிக்கை-

தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் கைதுகளைத் தாண்டி இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு இந்த வன்முறைக்கு காரணமாக அமைந்தவர்களை சட்டத்தின் மூன்னால் நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையுடன் மூன்றாம் தரப்பு ஒப்பந்தம் இல்லை-அமெரிக்கா-

ஈரானில் இருந்து மூன்றாம் தரப்பின் ஊடாக மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கை எதனையும் இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று, அமெரிக்கா தெரிவித்துள்ளது. றொய்டர்ஸ் இணைத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்றாம் தரப்பின் ஊடாக இலங்கைக்கு ஈரானில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் முற்றாக மறுத்துள்ளார். எவ்வாறாயினும் மூன்றாம் தரப்பின் ஊடாக ஈரானிலிருந்து இலங்கை மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது.

ராமநாதபுரம் சென்றடைந்த இலங்கை அகதிகள்-

தமிழகம் இராமநாதபுரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையிலிருந்து 4பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளனர். தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரே இவ்வாறு படகுமூலம் வந்ததாக அப்பகுதி மீனவர்கள் கடலோர பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து கடலோர பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். அந்தோணி குரூஸ் மற்றும் இவரது மனைவி செல்வி குரூஸ், ரோமேரியா, ரியான்ச் ஆகிய இரண்டு குழந்தைகளுமே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர். இலங்கையில் தொழில் மற்றும் வேலைவாயப்பு கிடைக்க மிகவும் சிக்கல் என்றும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மனைவிக்கு சிகிச்சையளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை என்றும், தங்களது உறவினர் தமிழகம் புதுக்கோட்டைஅகதிகள் முகாமில் இருப்பதால் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால்  தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்ததாகவும் இவர்கள் பொலீஸ் மற்றும் கியூ பிரிவினரின் விசாரணையின்போது கூறியுள்ளனர்.

ஆட்கடத்தலை கட்டுப்படுத்தாத நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்-

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தவறிய நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி தண்டிக்க இலங்கையரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோத ஆட்கடத்தல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, குவைட், கட்டார், ஜோர்தான், எகிப்து, ஈராக், ஆப்கானிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கட்டட நிர்மாணப் பணியாளர்கள் உதவியாளர்களாக வீட்டுப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்பு பெற்றுச்செல்வோர் பலவந்தமாக தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதுடன், துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அமெரிக்கா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அளுத்கம வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்-

kandiththu (4)kandiththu (2)kandiththu (1)kandiththu (6)kandiththu (5)kandiththu (3)அளுத்கமை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நகரில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்றுகாலை 9 மணிமுதல் 10 மணிவரை இப்போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுத்திருந்தன. ஒரு மணிநேரம் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் அமைப்புக்களும் ஆதரவு வழங்கி இருந்ததுடன் அக் கட்சிகளை சேர்ந்தவர்களும், முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனர். இன அழிப்பினால் நல்லிணக்கம் உருவாகுமா?, இன்னுமொரு கறுப்பு யூலை எமக்கு வேண்டாம் அரசே, அளுத்கம பேருவளை மக்களுக்கு நீதிவேண்டும், அளுத்கம தாக்குதலுக்கு பொதுபல சேனாவே பொறுப்பு உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறும் சுலோகங்களைத் தாங்கியவாறும் இப் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் மாணவர்கள் தொழுகை அறைமீது கழிவு எண்ணெய் வீச்சு-

muslimயாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறைமீது இன்றுகாலை 8மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. பூட்டிய அறையின்மீது சிறு பைகளில் கொண்டு வந்த கழிவு எண்ணையே அவர்கள் வீசி சென்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லீம் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களை கண்டித்து நேற்றையதினம் யாழ். பல்கலைகழக சமூகத்தால் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. .

அதிபர்களின் அசமந்தப் போக்கால் அடையாள அட்டைகளை பெறுவதில் சிக்கல்-

pokkaalகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக இம்முறை தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புவதில் பாடசாலை அதிபர்கள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கூறியுள்ளார். ஒக்டோபர் 31ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியாகவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை, மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கடந்த பெப்ரவரி மாதமளவில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆட்பதிவு ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிபர்களின் அசமந்தப்போக்கு காரணமாக மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல்நிலை ஏற்படக்கூடும் என்றும் ஆட்பதிவு ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அகதிகள் தினம் இன்று-

ulaga akathikal thinamஇன்று உலக அகதிகள் தினமாகும், உலகில் தற்போது சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அல்லல்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 20ஆம் திகதி ஆபிரிக்க அகதிகள் தினம் கொண்டாடப்படுவதால், அந்த நாளை உலகில் உள்ள பல நாடுகள் உலக அகதிகள் தினமாகப் பிரகடனப்படுத்தியிருந்தன. இதேவேளை ஆபிரிக்க அகதிகள் தினமான ஜூன் மாதம் 20ஆம் திகதியை உலக அகதிகள் தினமாகக் கொண்டாட 2000ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுமார் 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் இந்த உலகில் அகதிகளாக உள்ளனர் என்பது அதிர்ச்சியான செய்தியாகும். யுத்தம், வன்முறை, பஞ்சம் போன்ற பல்வேறு காரணங்களால் அகதிகள் உருவாகின்றனர். சிரியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவான அகதிகள் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் உலக நாடுகளில் அகதிகளாக தஞ்சம் பெற்றுள்ளனர். அகதிகள் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

இரணைமடு குடிநீர்த்திட்ட நிதியை திரும்பப் பெறும் பிரான்ஸ் நிறுவனம்-

iranaimadu kudineerகிளிநொச்சி, இரணைமடு குடிதண்ணீர் திட்டத்துக்கு நிதி வழங்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்த 5ஆயிரத்து 232மில்லியன் ரூபா நிதியைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபையின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை என்பவற்றை அடுத்தே நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது என கூறப்படுகிறது. இத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 7 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாவும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் 2 ஆயிரத்து 180 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசு 2 ஆயிரத்து 838 மில்லியன் ரூபாவும் நிதி வழங்கியிருந்தன. அவற்றுக்கு மேலாக பிரான்ஸைச் சேர்ந்த ஏ.எவ்.டி நிறுவனம் 5 ஆயிரத்து 232 மில்லியன் ரூபா வழங்கியிருந்தது. குறித்த திட்டத்தை தற்போது உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு வட மாகாணசபை எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இதனால் பாதிப்படைவார்கள் என்று அத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

இலங்கையில் சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகம்-

இலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே இவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 2 கோடி 3 லட்சம் ‘மொபைல்’ தொலைபேசிகள் உள்ளன இதில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையான தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதன்படி 2011இ 2012 களில் 34 லட்சமும்இ கடந்த வருடத்தில் 41 இலட்சமும் ‘மொபைல்’ தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை நிலைமை கவலை தருகின்றது-அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்-

imagesCA4LGNKJலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டுகிற செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன. தென்னிலங்கையில் அளுத்கமவிலும், அதன் அயல் பகுதிகளிலும், கடந்த 15ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் யக்கி, மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வன்முறைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் அண்மைக்கால வன்முறைகள் எமக்கு கவலையளிக்கின்றது. இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையைப் பேணமுடியாது. நாம் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவே அரசைக் கோருகின்றோம். அதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகவுள்ளோம் என கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு தெரிவித்துள்ளது.

பேசம்பவங்களை கண்டித்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்-ருவளை, அளுத்கம

muslimkal meethaanaPeruvalai sampavar hartal (2)அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் இன்று பல இடங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட பல பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் காத்தான்குடி, வாழைச்சேனை, ஏறாவூர், ஓட்டமாவடி, மீராவோடை, பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஓட்டமாவடியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின்மீது இன்றுகாலை கற்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறையின் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, ஒலுவில், அக்கரைப்பற்று, பொத்துவில், மாளிகைக்காடு, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அளுத்கம சம்பவங்களைக் கண்டித்து அட்டாளைச்சேனையில் கண்டன பேரணியொன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது. திருமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை நகர், வெள்ளைமணல், நாச்சிக்குடா பகுதிகளில் இன்றும் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது. கிண்ணியா, தோப்பூர், முள்ளிப்பொத்தானை பகுதிகளில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் நகரிலும், ஐந்து சந்தி பகுதியிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர் பகுதியிலுள்ள சில கடைகள் மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகரிலும் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தளம் சிலாபம் பிரதான வீதியின் ரத்மல்யாய பிரதேசத்திலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை-

ilankai india meenavar pechchuஇலங்கை – இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது. இம்முறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். மீன்பிடி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தீர்மானமொன்றை பெற்றுகொள்வது சாத்தியமற்றது என்பதால், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கை மீனவர்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். தற்போது சுமார் 90 இலங்கை மீனவர்கள் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒரிஸா மாநிலங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்-

jaffna-uni-04முஸ்லிம் மக்களுக்கு எதிராக களுத்துறை அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கடந்த 15ம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில் குழந்தை உட்பட 4பேர் உயிரிழந்துள்ளதுடன் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் பல லட்சக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. இந்த செயற்பாடானது இனங்களுக்கிடையில் மிக மோசமான முரண்பாடுகளை உருவாக்கும் எனவே இச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இராசகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்கள், ஆசிரியர்கள் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு தமது ஆதரவையும் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட்டரக்க விஜித்த தேரர் மீது தாக்குதல்-

Watareka-Vijitha1மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் ஜாதிக பலசேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கை, கால்கள் கட்டப்பட்டநிலையில் பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகிலேயே இன்றுகாலை 6.30மணியளவில் அவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய ஆளடையாள அட்டையும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் அவசர சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் வாக்குமூலம் பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். வட்டரக்கதேரர் பாணதுறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அதிகாரி இலங்கைக்கு விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின், அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஒஸ்கா பெர்ணான்டஸ் டரன்கோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று இலங்கை வரவுள்ள இவர் நான்கு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது. இதன்போது, ஒஸ்கா பெர்ணான்டஸ் டரன்கோ அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ.நாவை புறக்கணித்தால் இலங்கை தனிமைப்படும்;-இரா.சம்பந்தன்-

sampanthanஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. இவ்வாறான மனநிலையுடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது, சர்வதேச நியதிகளுக்கு கட்டுப்படாது இப்போதிருக்கும் அதிகாரங்களை இந்த நாடாளுமன்றில் பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் பெரும் விளைவுகளையே எதிர்நோக்க நேரிடும். இத்தகைய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபட்டால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை மேலும் தனிமைப்படுத்தப்படும் நிலையே ஏற்படும். ஆனாலும் ஒருநாள் இந்த ஆட்சிப் பீடத்தின் தெரிவிலிருந்து நாடு கட்டாயம் மீளத் திரும்ப வேண்டியிருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என நாம் நம்புவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ஐ.நாவின் விசாரணை இலங்கைக்கு எதிரானதல்ல. அது மனிதாபிமான, மனித உரிமை சட்டங்களை ஒரேயடியாக மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிரானது. முழு நாட்டையுமே பாதிப்புற வைத்த சட்ட விலக்களிப்புக் கலாசாரத்துக்கு எதிரானது. அது வடக்கில் இளைஞர்கள் காணாமல்போகச் செய்யப்பட்டமைக்கும் தெற்கில் இளைஞர்கள் காணாமல் போனமைக்கும் எதிரானது. ஐ.நா. மனித உரிமை விசாரணைக் குழுவை விசாரணை நடத்த இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கோரி அரச தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைமீதான இரண்டு நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நீண்ட உரையை சம்பந்தன் எம்.பி. சபையில் ஆற்றினார். அந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. விசாரணையில் நம்பிக்கையில்லை-அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா-

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைமீதும் அரசுக்கு நம்பிக்கையில்லை. பிரபாகரனையும், தீவிரவாதத்தையும் இல்லாதொழித்ததன் காரணமாக இலங்கையை தண்டிப்பதற்கு மேற்குலகம் முயற்சிக்கிறது. இவ்வாறு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நாட்டுக்கு எதிரான யோசனை முன்வைக்கப்பட்டது. சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசு எதிர்ப்பதற்கு மேற்படி விடயங்களே பிரதான காரணங்களாகும் இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்தும் பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தீவிரவாதத்தை இல்லாதொழித்ததன் காரணமாகவே சம்பந்தனால் கூட இன்று ஜனநாயக காற்றை சுவாசிக்க முடிகிறது. அதற்காக எமக்கு பரிசு வழங்குவதை விடுத்து நாட்டை அசௌகரியத்திற்கு உட்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செயற்படுகின்றன. 13ஆவது திருத்தச் சட்டம் பலவந்தமான திணிக்கப்பட்டபோது நாட்டில் ஏற்பட்ட நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும். மீண்டும் அவ்வாறான நிலை தேவைதானா? பின்லேடனை அமெரிக்கா எவ்வாறு கொன்றது? ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? அரபு வசந்தத்தால் ஏற்பட்ட விளைவு என்ன? இவற்றை பற்றி மனித உரிமைகள் சபையில் பேசப்படுவதில்லை. மேற்குலகத்தினரே மனித உரிமைகளை அதிகமாக மீறுகின்றனர். அத்துடன் சர்வதேச விசாரணையை முழு சர்வதேச சமூகமும் கோரவில்லை. பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வர்த்தமாணி அறிக்கை ஆகியவற்றில் எமக்கு நம்பிக்கையில்லை. இவ்வாறான பின்னணிகள் காரணமாகவே விசாரணைகளை நாம் எதிர்க்கிறோம். நாட்டின் இறையான்மை சுயாதீனத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்-

aiமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் உடனடியாக இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறையாக பேருவளை, அளுத்கம சம்பவங்களை குறிப்பிட முடியும் எனவும், இந்த வன்முறைகள் ஏனைய இடங்களில் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சர்வதே மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை, முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் தங்களது கடமைகளை உரிய விதத்தில் செய்திருந்தால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. போராட்டம் நடத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கும் என முஸ்லிம் தரப்பினர் அரசாங்கத்திற்கு எச்சரித்த போதிலும், அதனை கருத்திற் கொள்ளாது பொதுபல சேனா இயக்கத்திற்கு அனுமதி வழங்கியமையே இந்த வன்முறைகளுக்கான பிரதான காரணமாகும். அண்மைக்காலமாக சிறுபான்மை மதச் சமூகங்கள்மீது பெரும்பான்மை கடும்போக்குவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதம்பையில் ஆயுதங்களுடன் மூவர் கைது, அளுத்கமையில் பெற்றோல் குண்டுகள் மீட்பு-

mathampaiyil (1)புத்தளம் மாவட்டம் சிலாபம் மாதம்பை பகுதியில் காரொன்றில் ஆயுதங்கள் கொண்டுசென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் சிறுகுற்றப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து ரி56 இரக துப்பாக்கி ஒன்றும், மகசின் ஒன்றும், 15 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், மகசின் ஒன்றும், 07 தோட்டாக்களும், கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இரத்தினபுரி, நிட்டம்புவ மற்றும் அங்கொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அளுத்கமையில் பெற்றோல் குண்டுகள் 56 உட்பட தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆயுதங்களுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை தாம் கைது செய்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அலவாங்கு, கோடரி, துப்பாக்கி வடிவிலான இரும்பு கம்பிகள் இரண்டும் அடங்குவதாகவும் அளுத்கமை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய கடலில் படகு மூழ்கியதில் 61 பேர் மாயம்-

malaysia kadalilஇந்தோனேசிய பிரஜைகள் 97 பேருடன் பயணித்த படகொன்று மலேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட இந்த பயணிகள் அனைவரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் என மலேசிய கடற்பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானவர்களில் 61 பேர் காணாமற் போயுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. பயணிகளை மீட்பதற்காக படகொன்று குறித்த கடற்பகுதிக்கு சென்றுள்ளதுடன் மேலும் இரண்டு கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில் பயணித்த இவர்கள் அனைவரும் மலேசியாவில் சட்டவிரோதமாக பணிபுரிவதாகவும் புனித ரமழான் மாதத்திற்காக இவர்கள் மலேசியா திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் தலையீடு செய்வதாக உறுதி-

a(744)களுத்துறை மாவட்டம் அளுத்கம உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று இரவு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடியபோதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்பில் ஈரான், கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறித்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு அளுத்கம சம்பவம் தொடர்பில் மிகவும் ஆழமாக விளக்கிக் கூறியதுடன் அதன் பின்னணிகள் குறித்தும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இவற்றை அவதானமாக கேட்டறிந்த தூதுவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும் அவர்களின் உயிர், உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்-தமிழ் தேசியக் கூட்டமைப்பு-

1719856666tna3அளுத்கமை தர்ஹாநகரிலும் பேருவளையிலும் முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன. எனவே, அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் இத்தகைய சம்பவங்கள் திரும்பவும் இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. அளுத்கமை தர்ஹாநகரிலும் பேருவளையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் மிகுந்த கவலையைக்குரியவை. மனதை சஞ்சலத்துக்கு உட்படுத்துபவை. முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதல்களுக்கு இலக்காகி பலத்த சேதமடைந்திருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுள் மூவர் உயிரிழந்துள்ளனர். பெரும்பான்மை இனத்தவர்களின் தீவிரப் போக்குடைய இரு இயக்கங்கள் கூட்டம் நடத்திவிட்டு வீதிவழியாக ஊர்வலம் போன சமயம் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது. இச் சம்பவம் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்த போதிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாயினும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் அவர்களால் தடுக்க முடியவில்லை. இது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பில்லாத நிலையில் இருந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது. கடந்த காலத்திலும் முழு நாட்டுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. தவறிழைத்தவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் இத்தகைய சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்காக வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

பொதுபல சேனாவை தடை செய்யக் கோரி காத்தான்குடியில் பேரணி-

kaathaanku_protast_008அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொதுபல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடத்தியது. இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் பொதுபல சேனாவை உடனடியாக தடை செய், சிறுபான்மை மக்களை பாதுகாப்பது மஹிந்த சிந்தனையல்லவா? இனவாதிகளை இனம் கண்டு சட்டத்தின்முன் நிறுத்து, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு தா? இனவாதிகளை கைது செய், அரசே மத வன்முறையை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஹாரூன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உலமாக்கள் பொதுமக்கள் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர். பேரணி இறுதியில் பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யக் கோரி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மியதுல் உலமா சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. இப் பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு-

பாகிஸ்தானிய கூட்டு இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரபீல் சரீப் இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைத்துள்ளார். பாக்கிஸ்தானிய உள்ளூர் சேவைகள் மற்றும் பொது உறவுகள் அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலமாக இத்தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கு வொஷிங்டனில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்பு காரணமாக இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவ தளபதி எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள தீர்மானித்திருந்தார். இவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

அளுத்கம சம்பவம் குறித்து நவநீதம்பிள்ளை அதிர்ச்சி-

navipillai aluvalagamகளுத்துறை மாவட்டம் அளுத்கமவில் நடந்த வன்செயல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவனீதம்பிள்ளை பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வன்செயலை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வன்செயலை தூண்டிய வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து சிறுபான்மையினரையும் அது பாதுகாக்க வேண்டும் என்றும் ஆணையர் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்களுக்கும் இந்தமாதிரி வன்செயல்கள் பரவலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கனடா கண்டனம்-

canadaமுஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 15ஆம் திகதி அளுத்கம, பேருவள பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்களை கனடா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என மதச் சுதந்திரத்திற்கான கனேடிய தூதுவர் அன்ட்று பெனிட் தெரிவித்துள்ளார். அளுத்கம, பேருவள பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மத உரிமை மீறலை வெளிப்படையாக காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் சகல இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாற கனேடிய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள்மீது இலங்கையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட நபர்கள் தங்களது மத நம்பிக்கைகளுக்கு அமைய வழிபாடுகளில் ஈடுபடவும் சமயத்தை பின்பற்றவும் பூரண சுதந்திரம் இருக்க வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் அமைதி பேண வேண்டும். குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

அவுஸ்திரேலிய தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை-

australiaஇலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியா புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளின் மத்தியில் அவதானத்துடன் செயற்படுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பிரஜைகளிடம் கோரியுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான பாதுகாப்பு நிச்சயமற்ற நிலைமைகள் தோன்றலாம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களை நினைவு கூர்ந்து, அவுஸ்திரேலியா புதிய எச்சரி;க்கையை விடுத்துள்ளது. காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள தருணங்களின் உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறு இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜைகளிடம் கோரப்பட்டுள்ளது.

 

காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்-

a(744)யாழ்ப்பாணம் வலி. கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் பகுதியில் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு எதிராக கண்டனப் போராட்டமொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேச செயலகம் (வலி. கிழக்கு) முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது. வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீள்குடியேற்றக் கோரியும் அத்துடன், வளலாய்; பகுதியில் வலி. வடக்கு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலி. வடக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்துக்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களை வளலாயில் குடியேற்றுவதற்காக இராணுவம் காணிகளை துப்பரவு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தங்களது காணிகளில் தம்மை மீள்குடியமர்த்தும்படி கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வளலாய்ப் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கம் அப்பட்டமாக மீறுகிறது-இரா.சம்பந்தன்-

sampanthanஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார். அமைச்சர் உள்ளுர் ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தானது, ஒரு அப்பட்டமான மிரட்டலாகம். ஒரு சாதாரண இலங்கைப் பிரஜை இறுதிக்கட்ட போர் தொடர்பில் தனக்கு தெரிந்ததை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது, உண்மை வெளிவராமல் தடுக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையே. இவ்வாறான ஒரு நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியது, அந்தக் கருத்து தவறானது. அமைச்சரது இந்தக் கருத்தை சர்வதேச சமூகமும், ஐநா அமைப்பும் உள்வாங்க வேண்டும். ஐ.நாவின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பதை பாராளுமன்றமே முடிவு செய்யும் என ஜனாதிபதி கூறியுள்ளது புதிய விஷயம் அல்ல, அந்த குழுவுக்கு அனுமதியளிக்கப்படாது என்பதை அரசு முன்னரே தெட்டத் தெளிவாக கூறிவிட்டது. இப்போது நாடாளுமன்றம் முன்பாக அப்படியொரு பிரேரணையைக் கொண்டு வருவதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்தாகும் என அவர் மேலும் கூறினார். இறுதிப் போரை தொடங்கும் முன்போ, அல்லது போர் நடைபெறும்போதோ பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டுவராத அரசு, இப்போது ஏன் ஐ.நா விசாரணை குறித்த முடிவை பாராளுமன்றம் எடுக்கும் என கூறுகிறது என சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.

புத்தளம் மீனவர்கள் பணிபகிஷ்கரிப்பு-

மீனவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியம் இடை நிறுத்தபட்டுள்ளதை கண்டித்து இயந்திரப் படகுமூலம் கடற்றொழிலில் ஈடுபடும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்கு செல்லாத மீனவர்கள், தமது வலைகளை பழுது பார்க்கும் நடிவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, நீர்கொழும்பு பிரதேச மீனவர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடப்போவதாக  மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

நான் அமைச்சராக இருக்க வெட்கப்படுகின்றேன்: ஹக்கீம்-

Hekeemஎனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டம் பேருவளையின் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருந்த மக்களிடம் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எனது மக்களை காப்பாற்றுவதற்கு முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை களுத்துறையில் இடம்பெற்ற பொதுபல சேனாவின் கூட்டமொன்றின்போது செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டும், அவர்களின் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கமராக்கள் உடைத்தெறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி வாகன விபத்தில் 8 பேர் காயம்-

925635413accsi.Crash-Generic-300x225கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். லொறியொன்றும் வேனும் இன்று அதிகாலை 3.30மணியளவில் மோதியதில் இவர்கள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 இலங்கை குறித்த விசாரணையை பாதுகாப்பு சபை வரை கொண்டுசெல்ல நடவடிக்கை-

இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வரையில் கொண்டு செல்லும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இருப்பதாக அதன் பேச்சாளர் ரொபர்ட் கொல்வின் ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். 12 பேர் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்கழுவின் நிபுணர்கள் குழு இலங்கை தொடர்பான விசாரணையை நடத்தி, அதன் இறுதி அறிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதம் மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த இறுதி அறிக்கையை ஆராயும் மனித உரிமைகள் பேரவை, அதனை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கும் என்று ரொபர்ட் கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கின்றன-பிரித்தானியா-

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்ந்தும் கவலை தருவதாக அமைந்திருப்பதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சர் பரோனேஸ் வர்சி இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மனித உரிமை நிலவரங்கள் அதிக கவலைதருவனவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாக கொண்டு வருவதற்கு, சர்வதேச சமூகத்துடன் பிரித்தானியா இணைந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜனாதிபதி ஐ.நா பொதுச்செயலர் சந்திப்பு-

பொலிவியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜி- 77 அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திதது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜி- 77 அரச தலைவர்கள் மாநாடு இலங்கை நேரப்படி நேற்றுமாலை 6.45க்கு ஆரம்பமானது. இந்த மாநாட்டிற்கு முன்னரே இருவருக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இராணுவம்போல் செயற்பட வேண்டும்-ரணில்-

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவத்தை போன்று செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அண்மையில் இரண்டாம் உலக யுத்தம் தொடர்பில் இராணுவத் தளபதி ஒருவர் எழுதிய நுலை வாசித்தேன் அதில் உள்ள விடயங்களை ஐ.தே.கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்த முடியும். போரின் வெற்றியில் போர்ப்படை தளபதிகளோ, ஏனைய தலைவர்களே தாக்கம் செலுத்துவதில்லை. போரில் ஈடுபட்டிருந்த முன்னரங்கு போராளிகளின் குழுக்களும், அவற்றின் தலைவர்களுமே போர் வெற்றியில் முக்கிய பங்களிப்பை செய்கின்றனர். இதன்படி எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு, கிராம ரீதியாகவும், நகர ரீதியாவும் குழுக்களையும், தலைவர்களையும் நியமித்து வெற்றியை நோக்கி இராணுவத்தை போல முன்னேற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு-

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது  81 ஆவது பிறந்த நாளான இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.  எதிர்காலத்தில் நடக்க இருக்கும் எந்தவொரு தேர்தலிலும்  போட்டியிடப் போவதில்லை எனவும் தமது எதிர்காலத் திட்டம் தொடர்பில் விரைவில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் வி.ஆனந்தசங்கரி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் தேர்தல் நடத்தவே முடியாது-அனுரகுமார திஸாநாயக்க-

18ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடத்த முடியாது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசமைப்பின் அடிப்படையில் 2ஆம் தவணைக் காலத்தில் மட்டுமே, பதவிப் பிரமாணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளின் பின் தேர்தலுக்கு அழைப்புவிடுக்க முடியும். எனினும், 18ஆம் திருத்தச் சட்டத்தில் மூன்றாம் தவணைக்காக எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்குஅழைப்பு விடுப்பது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. 18ஆம் திருத்தச் சட்டத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்ததாக கருத முடியாது. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை. எதிர்க்கட்சியிலிருந்து தாவியவர்களை உள்ளடக்கியே அரசின் மூன்றில் இரண்டு பலம் காணப்படுகின்றது. அதனை மக்களின் ஆணையாகக் கருதிவிட முடியாது. 18ஆம் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான கால வரையறைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலைமையில் ஜனாதிபதியால் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

தலிபான்களின் தளமாக இலங்கை, இண்டர்போல் எச்சரிக்கை

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு  நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். தற்போது தலிபான் இயக்கம் மத்தியகிழக்கு நாடுகளில் பரவி வருவதுடன் தீவிரவாத செயல்பாடுகளை மேற்கொள்ள இலங்கையை தலிபான்கள் ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருவதுடன், கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி என கூறப்படும் மொஹமட் ஷாகீர் உஷைன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை ஜனாதிபதி பொலிவியாவுக்கு விஜயம்

1aa(56)பொலிவியா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாதானத்திற்கான விசேட விருது ஒன்றை வழங்க உள்ளது. சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான விசேட விருது ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளது. பொலிவியாவின் இல் முன்டோ என்னும் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜீ77 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பொலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஜீ77 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பொலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் பற்றி பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ரெலோவை சேர்ந்த எவராவது கொலைகள் -ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென நீரூபிக்கப்பட்டால் நடவடிக்கை:

teloதமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்ந்த எவராவது கடந்த காலங்களில் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென விசாரணைகளில் உறுதிப் படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் நாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையென அக்கட்சியின் பிரமுகரான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களில் எமது அமைப்பிலிருந்து விலகிய சிலர் வெள்வேறு தரப்புக்களால் இயக்கப்பட்டனர். அவர்களே அத்தகைய குற்றசெயல்களில் ஈடுபட்டதாக தாம் நம்புவதாகவும், யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் அங்கு தெரிவித்தார். Read more

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா? என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா? என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ஆம் திகதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளின் வாழும் இலங்கை தமிழரக்ள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த இயக்த்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால்  ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் – கொழும்பு, கண்டி வீதி போக்குவரத்து மண்சரிவினாலே தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, ஹட்டன் செனன் தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவுகாரணமாக நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். டிக்கோயா போர்டைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 88 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் தற்காலிகமாக புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மகாவலி ஆற்றின் கிளையாறான கொட்டகலை ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பத்தனை-திம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் வீடமைப்பு திட்டத்தினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால்  30 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண் சரிவுக்காரணமாக ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் ஐந்தடி உயரத்திற்கு வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகவும் பாம்பு மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகவும்  வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோட்டனில் 348 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையில் ஆளணிப் பற்றாக்குறை

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையினாலேயே இராணுவத்தினரின் உதவியினை தாம் பெற்றுக்கொள்வதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், Read more