அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் மாத்திரமே ஒரு ஆளுநரை நீக்க முடியும்-

imagesCAANYQEWமக்கள் நலன் சார்ந்த விடயத்திற்கு என்றைக்கும் தடையாக இருக்க மாட்டேன் என வடமாகாண ஆளுநர் ஜீ,ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையுடன் நெருங்கி செயற்பட தயாராகவே இருக்கின்றேன். மாகாணசபை சட்ட திட்டங்களுக்கு அமைவாக மாகாணசபை செயற்பட்டால் ஒத்துழைக்க தயாராக இருக்கின்றேன். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஒரு ஆளுனரை நீக்குவதாயின் ஆளுனர் அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருந்தால், அரச நிதியை கையாண்டு இருந்தால், லஞ்சம் ஊழல் மோசடி செய்திருந்தால் தான் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தை கைவிட்டு இருந்தால் ஆளுநரை நீக்க முடியும். இந்த செயற்பாடுகள் மாகாண சபையினால் நிரூபிக்கப்பட்டு மாகாணசபை ஜனாதிபதிக்கு அறிவித்தால் ஜனாதிபதியாhல் ஆளுநர் நீக்கப்படுவார். இந்நடைமுறை தவிர்ந்து வேறு எவ்விதத்திலும் மாகாண சபையால் ஆளுநரை நீக்கமுடியாது அதற்குரிய தகுதியோ சட்டமோ இல்லை. வடமாகாண பிரதம செயலாளர் முதலமைச்சருக்கு கீழ் பணியாற்றுபவரல்லர். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர். மாகாண நிதிக்கு பொறுப்பானவர் என்ற வகையில் முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவார். சட்டரீதியான முதலமைச்சரின் பணிப்பினை அவரினால் புறந்தள்ள முடியாது. தற்போதைய வடமாகாண பிரதம செயலர் மிக திறமையாக சட்டத்திற்கு அமைவாக செயற்படுபவர் என்றார்.

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்தவருக்கு விளக்கமறியல்-

pakistan kkaaka vevu paarthaபாகிஸ்தானுக்காக இந்தியாவில் வேவு பார்த்ததாக தெரிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜ் 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தின் துறைமுகங்கள், வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல முக்கிய பிரதேசங்களின் வரைபடங்களை அவர் பாகிஸ்தானுக்கு தயாரித்து வழங்கியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை அருண் செல்வராஜா, புலிகளுடனும் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் இலங்கையில் புலிகளின் உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியமைக்காக தேடப்பட்டு வருபவர் என்று த ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்துள்ளன. இவரது வங்கி கணக்கில் இந்திய ரூ.2 கோடி வரை பணம் இலங்கையிலிருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்மையில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி சாகிர் உசேன், கடந்த 2012-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தமீம் அன்சாரி ஆகியோருடன் அருண் செல்வராஜூக்கு இடையே நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…….... Read more