Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-

tna_pressmeet_002தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார். அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம்; பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். Read more

புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் முழு விபரம் வருமாறு

amachuஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:- Read more

இரத்ததானம் வழங்கல் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு- (Photos)

appabday05எமது கட்சியின் ஆதரவாளரான திரு. இ.தயாபரன் அவர்களின் 50ஆவது பிறந்தநதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வும், கருவி என்றழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலயைத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (10.01.2015) சனிக்கிழமை யாழ். கோண்டாவிலில் இடம்பெற்றது. இதன்போது 53பேர் இரத்ததானம் வழங்கியிருந்தனர். அத்துடன் கருவி என்னும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தினருக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்தத்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் கோண்டாவில் இந்துக்கல்லூரியில் பயிலும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இணுவில் லயன்ஸ் கழகத்தினருக்கு 10,000 ரூபாய் பணமும் வழங்கிவைக்கப்பட்டது. Read more

விழிசுட்டி பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு-(Photos)

வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது கோரிக்கையின் பிரகாரம் 7.01.2015 சனிக்கிழமை சங்கானை விழிசுட்டிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரனேசன் அவர்களால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது 50மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப் பகுதியில் பாதிக்கப்ப்ட குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்படும் என வலி மேற்கு தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். Read more

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமனம்-

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமை புரிந்த ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டு இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்கின்றார். அரச சேவையிவ் 25வருட கால அனுபவமுள்ள இவர். சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியாவார்.

புதிய ஜனாதிபதி கடமையை பொறுப்பேற்றார்-

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், உயர் தரத்திலான அரச ஊழியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வது அனைவருடைய கடமையாகும். தேர்தல் பிராசாரங்களில் குறிப்பிட்டது போன்று 100 நாட்களில் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார-

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துகொள்ளப் போவதில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 100 நாட்களை மாத்திரமே கொண்டது. இவற்றின் செயற்பாடுகள் குறுகிய காலத்தை அடிப்படையாhக கொண்டவை. எனவே இந்த அமைச்சரவையில் இணைவது எவ்வித பயனும் இல்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் தொண்டமான் பிணையில் விடுதலை-

தபால் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று பண்டாரவளை நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவர் ஊடாக சரணடைந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்றுமாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 2லட்சம் ரூபா பெறுமதியா இரு சரீரப் பிணைகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தபால் ஊழியரான பெரியசாமி ஞானசேகரனுக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் ஒன்றை அளிக்குமாறு செந்தில் தொண்டமானுக்கு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கல்வியமைச்சர் குணவர்தன குடும்பத்துடன் பயணம்-

முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தனது குடும்பத்துடன், இன்று திங்கட்கிழமை சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 எனும் விமானத்தில் அவர் சீனாவுக்கு பயணமானதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.