Header image alt text

மன்னாரில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம்-

mannaril pirajaikal kulumannar pirajaikal kuvinமன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது இதன்படி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்றுகாலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த மௌனப் பேரணி மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது. “வடக்கில் அதிகளவான இராணுவ குவிப்பு எதற்கு”, “சர்வதேசமே போர்க்குற்றத்தை விசாரணை செய்”, “நீண்டகால கைதிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்”, “எங்கள் பிள்ளைகள் எங்கே”, “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணையினை விரைவுபடுத்து” போன்ற பல சுலோகங்களைத் தாங்கியவாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். குறித்த மௌனப் போராட்டம் நண்பகல் 12.30க்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்;க்கும் வகையிலேயே இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் காணாமல் போனோரின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஆனைக்கோட்டையில் தமிழ் பசங்க திரைப்படம் வெளியீடு-

tmailயாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சங்கானைப் பிரதேச இளைளுர்களின் ஒத்துழைப்புடன் பிரதீபனின் தயாரிப்பில் உருவாகிய தமிழ் பசங்க திரைப்படம் கடந்த 15.01.2015 அன்று மதியம் 2 மணியளவில் ஆனைக்கோட்டையில் லெஸ்லி திரையரங்கில் திரையிடப்பட்டது. இவ் நிகழ்வில வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததோடு பாராட்டு செய்தியையும் வழங்கினார். இவ் நிகழ்வின் போது யாழ் மாவட்ட பாராஞமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் முதற்பிரதியினை பெற்றுக் கொண்டார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான திரு. பரஞ்சோதி, திரு. கஜதீபன், திரு. ஆணோல்ட், கலாநிதி. சர்வேஸ்வரன் முதலான பலரும் கலந்து சிறப்பித்ததுடன், படைப்பாளியும் இயக்குனருமான பிரதீபனுக்கு பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.

 tmail1tmail2 tmail3 tmail4 tmail5 tmail6

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சகலருக்குமெதிராக நடவடிக்கை-ஜனாதிபதி-

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொடயில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். எந்தவொரு அரசாங்கமும் வழங்காத நிவாரணத்தை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட எவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவேன். நாட்டில் இவ்வாறு இடம்பெற அனுமதிக்க முடியாது. நாடு அபிவிருத்தி அடைவது என்பது வீதிகளும் கட்டடங்களும் நிர்மாணிக்கப்படுவதல்ல. பௌதீக வளங்கள் அபிவிருத்தி அடையும் போது அதற்கு ஏற்றவாறு மக்களின் ஆன்மிகமும் வளர்ச்சியடைய வேண்டும். மக்களின் மனங்கள் மேம்பட வேண்டும். ஆகவே புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது எளிதான விடயமல்ல நாம் துட்டகைமுனுவோ தேவநம்பியதிஸ்ஸவோ அல்ல. நான் மன்னரும் அல்ல. நாம் மகா விஜயபாகு மன்னனோ மகா பராக்கிரமபாகு மன்னனோ அல்ல. நான் உண்மையாகவே ஜனநாயக நாட்டின் சாதாரண மக்கள் சேவகன் என்பதை தெளிவாக கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.

மீரியபெத்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்-

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசலையின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பாடசாலையின் ஒரு மண்டபத்தில் இவர்கள் தங்கியிருந்த நிலையில், பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீரியபெத்த மண் சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த சுமார் 25 குடும்பங்களை சேர்ந்த 65பேர் தொடர்ந்தும் ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் துணைவியார் மீதும் முறைப்பாடு-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் உதவி காவல்துறை அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் மனைவியே இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திறைசேரியினால் 500 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது கணவரான வாஸ் குணவர்த்தன விசாரணைகளை மேற்கொண்டார் இதன்போது இந்த விற்பனையில் சிராந்தி ராஜபக்ச தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்போது உதவி காவல்துறை அதிபர் அனுர சேனாநாயக்க, விசாரiணையை நிறுத்துமாறு உத்தரவிட்டார் அத்துடன் இந்த விடயம் பொய்யானது என்று கூறி ஊடகங்களுக்கு கருத்துரைக்குமாறும் தமது கணவரிடம் கோரப்பட்டது. எனினும் அதனை மேற்கொள்ளாத நிலையிலேயே தமது கணவரும் மகனும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக வாஸ் குணவர்த்தனவின் மனைவியான சாமலி தெரிவித்துள்ளார்

மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு முடக்கம்- போக்குவரத்து பணிப்பாளருக்கு தடை-

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீடடு முடக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழங்கிய பணிப்பின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே மீது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பணிப்பாளராக பணியாற்றிய கீர்த்தி சமரசிங்க, வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியின் பதவி காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24ம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும்-அமைச்சர் கரு ஜயசூரிய-

எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.