புதிய மூன்று ஆளுநர்கள் நியமனம்- மத்திய வங்கி ஆளுநரும் நியமனம்-

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அதற்கமைய – மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ கடிதத்தினை அன்ஜுன மஹேந்திரனிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்துள்ளார்.