Header image alt text

வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் புதிய பாதுகாப்பு செயலர் சந்திப்பு-

pathukappuஇலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பலர் புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.யு.டி பஸ்நாயக்கவை பாதுகாப்பமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இச் சந்திப்பில் சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்னல் லி செங்லின், அவுஸ்திரேலியாவிற்கான உயர் ஸ்தானிக அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஜேஸன் ஸடியர்ஸ்-, பங்களாதேஷ் உயர் ஸ்தானிக அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஷாஹ் அஸ்லம் பர்வஸ் ,இந்திய உயர்ஸ்தானிரகர் அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பிரகாஷ் கோபாலன், ஜப்பான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் மொடட்சுகு சிகேவா, பாகிஸ்தான் உயர் ஸதானிகர் அலுவலக பாதுகாப்பு ஆலோசகர் ராஜில் இர்ஷாட் கான், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கொமான்டர் ரொபர்ட் நொஸ் ரொஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் தலைமையில் அபிவிருத்தியை ஆராயும் குழு அமைப்பு-

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுக, நகர அபிவிருத்தித்திட்டம், வடக்கு அதிவேகப்பாதை போன்ற பொது வசதிகள் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரதமர் ரணில் விக்கிமசிங்கவை தலைவராக கொண்டு இயங்கும் என்றும் அவருடன் எரிசக்தி மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, துறைமுக, கடற்றொழில் மற்றும் விமான சேசைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாறினாலும் ஐ.நாவின் முடிவில் மாற்றமில்லை-

human raightsஇலங்கையில் ஆட்சி மாறினும் ஐ.நாவின் முடிவில் மாற்றமில்லை என ஐ.நா மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு ஆட்சியை அமைத்துள்ளது. எனினும் ஆட்சி மாறினாலும் விசாரணையில் மாற்றம் இல்லை. எனவே திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிவிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல்ஹீசைனின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின்போது போர்க்குற்றம் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இதுகுறித்து பொறுப்புக் கூறப்படவில்லை. இதனையடுத்து ஜெனீவா கூட்டத்தொடரில் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு அமைவாக கடந்த வருடம் யூலைமாதம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் வாய்மொழிமூல அறிக்கையும் செப்ரெம்பர்மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இறுதி எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மனித உரிமை ஆணையாளர் ஜனாதிபதியின் பிரதிநிதி சந்திப்பு-

manitha urimai aanaiyaalarஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிகார விடயங்கள் சம்பந்தமான விசேட ஆலோசகர் ஜயந்த தனபால நாளைய தினம், மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சேனை சந்திக்கவுள்ளார். ஜெனீவா நகரில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக இலங்கை தொடர்பில் நடைபெற்று வருகின்ற சர்வதேச விசாரணைகள் தொடர்பில் இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிபுணர்கள் குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னாள் அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் நாளை சந்திப்பின்போது இது குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த சர்வதேச விசாரணையின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வடக்கு முதல்வர் சந்திப்பு-

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நேற்றையதினம் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வடமாகாணத்தில் காணப்படுகின்ற நிலைமைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்போது வலிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வரை கிழக்கில் ஆட்சி மாற்றமில்லை-

east makanamகிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்ற விடயம் தொடர்ந்தும் தீர்க்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிர்வாகம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் இருந்து வந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படும்போதே, அங்கு புதிய மாகாண அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏதுநிலை காணப்படுகிறது. எனினும் இந்த இரு கட்சிகளும் இன்னும் விட்டுக் கொடுக்காத போக்கை கடைபிடித்து வருவதால், கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி குறித்து ஐயநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்ததல் இரு கட்சிகளுக்கும் முக்கியமானது என்ற அடிப்படையில், கிழக்கு மாகாண ஆட்சி தொடர்ந்தும் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் பெல்ஜியத்துக்கு விஜயம்-

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளையதினம் பெல்ஜியத்துக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார். இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது. இலங்கையில் சர்வதேச மீன்பிடி சட்டத்திட்டங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடையை நீக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

வெள்ளவத்தை தொடர்மாடியில் இருந்து வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு-

wellawattaகொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஹெவ்லொக் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து 4வயதான குழந்தை ஒன்று தவறிவிழுந்து உயிரிழந்துள்ளது. குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து இந்த குழந்தை வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடும் காயங்களுடன் கலுபோவில வைத்தியசாலையில் இந்த குழந்தை அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, காவற்துறை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் மேஜர் நாடு திரும்பினார்-

singa maerஅச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறிய இலங்கை இராணுவத்தினர் சிங்க படைப்பிரிவின் முன்னாள் மேஜர் ஜெனரால் ஜயநாத் பெரேரா நாடு திரும்பியுள்ளார். கடந்த காலங்களில் தாம் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உட்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூக நிலை கருதி தாம் நாடு திரும்பியதாகவும் மேஜர் ஜெனரால் ஜயநாத் பெரேரா கூறியுள்ளார்.

வவுனியாவில் “கறுப்பு வெள்ளை படம்” கவிதை நூல் வெளியீட்டு விழா-

black&whiteவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு மகா வித்தியாலய ஆசிரியர் திருவாளர் ஜெயச்சந்திரன் அபிராம்(கலாரசிகன்) எழுதிய “கறுப்பு வெள்ளை படம்” எனும் கவிதை நூல் இன்று (24.01.2015) மாலை 3.00 மணிக்கு ஆசிரியர் திருமதி கங்கைவேணி தலைமையில் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.கே.சிவஞானம், சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் திரு கே.கே.அருந்தவராஜா, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ந.பார்த்தீபன், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன், வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் திரு ஜெயச்சந்திரன், மன்னார் பெரியமடு மகா வித்தியாலய அதிபர் திரு து.குலதீபன், கலைஞர்கள், நண்பர்கள், கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து வெளியீட்டினை சிறப்பித்தார்கள். இவ் நிகழ்வுக்கான ஆசியுரையினை எழுத்தாளர் திரு கே.கே.அருந்தவராஜா அவர்களும், வெளியீட்டு உரையினை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ந.பார்த்தீபன் அவர்களும், நூல் அறிமுகத்தினை கவிதாஜினி சுகந்தினி அவர்களும் நிகழ்த்தியதுடன், முதல் பிரதியினை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு கே.சிவஞானம் அவர்களிடமிருந்து புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலிற்கான நயப்புரையினை வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் திரு ஜெயச்சந்திரன் நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“கறுப்பு வெள்ளை படம் கவிதை நூல் ஆசிரியரான அபிராம் யார்?
கழகத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவராக விளங்கியவரும், பின் தளத்திலும் பல பொறுப்புக்களை வகித்தவருமான புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வாசன் (புதுக்கோட்டை வாசன் அல்லது ஒல்லி வாசன் – ஜெயச்சந்திரன்) அவர்களின் மகனாகிய ஜெயச்சந்திரன் அபிராம்; தான் கறுப்பு வெள்ளை படம் கவிதை நூல் ஆசிரியரியராவார்.”

black&white2black&white1 black&white3 black&white4 black&white5 black&white6 black&white7 black&white8 black&white9 black&white10

உப தலைவராக எஸ்.பி திசாநாயக்க நியமனம், அதிபர்களுக்கு கேர்ணல் பதவி தேவையில்லை-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சாடி வந்திருந்தார். மேலும் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையிலேயே எஸ்.பி. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கேர்ணல் பதவியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கேர்ணல் பதவி அதிபர்களுக்கு அவசியமற்றது என்பதினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை-

ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற அரச அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தயாராகியுள்ளன. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு இணைப்பாளர்கள் போன்றோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போது பல்வேறு அரச வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டன. குறிப்பாக அரசாங்க அதிகாரிகள் முன்னாள் அரசாங்கத்தின் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வாறானவர்கள அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இணங்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த தேர்தலில் அவ்வாறான அதிகாரிகளை அரச கருமங்களில் ஈடுபடுத்தாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவென்காட் நிறுவன பிரதானி வெளிநாடு செல்வதற்கு தடை-

அவென்காட் பாதுகாப்பு நிறுவன பிரதானி நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். அண்மையில் காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. குறித்த ஆயுதக் களஞ்சியசாலை கடற்பயணத்தின் போது, ஆபத்துக்கள் ஏதும் ஏற்படின் அவசரத் தேவைக்காக வழங்க பயன்படுத்தப்படுபவை எனவும், இது அவென்காட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானவை எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காலி துறைமுகத்தில் காணப்படும் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், குறித்த நிறுவன பிரதானி நாட்டிலிருந்து வெளியேறினால் விசாரணைகளுக்கு தடங்கள் ஏற்படக்கூடுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமான சேவைகள் தலைவராக அஜித் டயஸ்-

இலங்கை விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்தப் பதவியில் முன்னாள் ஜனாதிபதியின் மைத்துனர் நிசாந்த விக்ரமசிங்க கடமையாற்றி வந்தார். நிசாந்த விக்ரமசிங்க பதவி விலக்கப்பட்டு அவரது இடத்திற்கே அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் டயஸ் கொழும்பில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்களின் இயக்குநராகவும், பிரித்தானியாவின் ஆடையுற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகள் 29பேருக்கு அழைப்பு-

அரசியல் பிரமுகர்களின் செல்வாக்குமூலம் நியமனம் பெற்ற இராஜதந்திரிகள் 29பேரை உடனடியாக நாட்டுக்கு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகளை நாட்டுக்கு அழைக்கும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இது, அரசாங்கம் மாறும்போது இடம்பெறும் வழக்கமான நிகழ்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் செல்வாக்கு மூலம் நியமிக்கப்பட்ட மற்றும் ஒரே நிலையத்தில் நீண்டகாலமாக கடமையாற்றும் இராஜதந்திரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

பிரதம நீதியரசரை விசாரணை செய்தமை ஆரோக்கியமான முன்னுதாரணம்-

பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டமையானது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான முன்னுதாரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நீதி அனைவருக்கும் சமம் என புலப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் ஒருநாள் செலவு 8000 ஆயிரம் ரூபாய் மாத்திரமே-

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம் 2850 ரூபா முதல் 8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது ஒருநாள் செலவு 2 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்கா மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் பிரதி செயலாளர்களாக டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தின்போதே நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மூன்று ஆளுநர்கள் நியமனம்- மத்திய வங்கி ஆளுநரும் நியமனம்-

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அதற்கமைய – மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ கடிதத்தினை அன்ஜுன மஹேந்திரனிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்துள்ளார்.

பிட்டகோட்டேயில் ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின-

carsகொழும்பு, பிட்டகோட்டே, சிறிஜயவர்த்தனபுர வாகன விற்பனை நிலையமொன்றில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமானதெனக் கருதும் 53 வாகனங்கள் மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் குறித்த வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமாதென பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 200 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இந்த வாகனங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் சீ.ஐ.டி விசாரணை-

GL peerisநாட்டின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலன்று இரவு, அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாணை நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பீரிஸ், ‘அலரிமாளிகையில் சம்பவ தினத்தன்று இரவு வேளையை தான் எவ்வாறு களித்தேன் என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குத் தெரிவித்தேன்’ என்று கூறியுள்ளார். அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவுக்கு விரைவில் வாக்குரிமை வழங்க நடவடிக்கை-

sarath fonsekaமுன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான வாக்குரிமை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்குவது தொடர்பில் சட்டத்தரணிகளிடம் தான் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தேசப்பிரிய கூறியுள்ளார். இதேவேளை, தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதன் ஊடாக சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடாளுமன்ற பதவியைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு இருக்கின்றதா என ஜயந்த கெட்டகொட எம்.பி, தன்னிடம் எழுத்து மூலமாக கேட்டுள்ளார் என்றும், கெட்டகொட எம்.பி.யின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற சட்ட அனுமதி உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார். Read more

இணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-

enuvil west1யாழ்ப்பாணம் இணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு நேற்று (21.01.2015) புதன்கிழமை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூபாய் 50ஆயிரம் (50,000) பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே கையளிக்கப்பட்டுள்ளன. இணுவில் மேற்கு இளைஞர் கழக நிர்வாகிகள் நேற்றையதினம் இவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

enuvil west2 enuvil west3 enuvil west4 enuvil west5.jpg. enuvil west6 enuvil west7

ஊழல், மோசடிகளை கண்டறிய ரணில் தலைமையில் விசேட குழு-

நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும், இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவார் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இடத்திற்கு சரத் பொன்சேகாவை நியமிப்பது-

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் சட்டப் பிரிவிடம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்து நமக்கு அறிக்கை சமர்பிக்கும்படி சட்டப் பிரிவினரிடம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு ஜயந்த கெட்டகொட நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு சரத் பொன்சேகா தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்த கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கெட்டகொட கூறியுள்ளார். மேலும் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால் அந்த வெற்றிடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படுவாரா என்று அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கெட்டகொட கடிதம்மூலம் கேட்டுள்ளார்.

சஜின்வாஸ், கப்ரால் ஆகியோரின் கடவுச்சீட்டுகள் முடக்கம்-

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டுகள் காலாண்டு காலத்திற்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை முடக்கி வைக்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக பதில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு அவர்களின் கடவுச் சீட்டுகளுக்கு தடைவிதக்கப்பட்டுள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிடைக்கப்பெற்ற பல்வேறு மோசடிகள் சம்பந்தமான முறைப்பாட்டை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜேவிபி யினால் இந்த முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் பதவி விலக மாட்டாரென அறிவிப்பு-

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல் பொய்யானது என, பிரதம நீதியரசரின் பேச்சாளர் சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி, இந்தத் தகவல் பொய்யானது என மறுத்ததோடு, பிரதம நீதியரசர் பதவி விலகுவதாகவோ அல்லது பதவி விலகுவது குறித்த கடிதத்தையோ, அறிவிப்பையோ இதுவரை விடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர நியமனம்-வாகனங்கள் வழங்கப்படாது- 

புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க ஜனாதிபதிக்கோ, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கோ புதிய வாகனங்கள் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கு பதிலாக அமைச்சர்கள், அந்தந்த அமைச்சகங்களில் தற்போது இருக்கும் வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பாதுகாப்பு காரணமாக கொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டன-

கொழும்பில் பாதுகாப்பு வலயங்களில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் இன்றுமுதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இத்தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாவத்தை, பாரன் ஜயதிலக மாவத்தை, செத்தம் வீதி, ஸ்டேன்லி விஜேசுந்தர சந்தி முதல் தும்முல்லை சந்தி வரை. ஆகிய வீதிகளே திறக்கப்பட்டுள்ளன.

வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி திறந்துவைக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)

muthiyorவவுனியா கோவிற்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலினால் அமைக்கப்பட்ட கோவிற்குளம் சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி இன்று(21ஃ01ஃ2015) காலை 10 மணியளவில் நல்லை ஆதினம் இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகளால் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்இ தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மத்திய குழு உறுப்பினரும்இ வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும்இ வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு)இ தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும்இ வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும்இ கோவிற்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)இதமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) முல்லை இணைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்)இ சமூக சேவை உத்தியோகஸ்தர் திரு எஸ்.எஸ்.வாசன்இ சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் திரு. கெனடி இ முதியோர் பராமரிப்பு உத்தியோகஸ்தர் திரு கிருபாஇ சட்டத்தரணி தயாபரன்இ தமிழ்மணி அகளங்கன்இ சமூக சேவகர் சேனாதிராசாஇ சமய பெரியார்கள்இசமூக ஆர்வலர்களான திரு முத்தையா கண்ணதாசன்இ சந்திரகுமார் (கண்ணன்) கோவில்குளம் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள்இ சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

muthiyor muthiyor01 muthiyor02 muthiyor03 muthiyor04 muthiyor05 muthiyor06 muthiyor07 muthiyor08 muthiyor10 muthiyor11 muthiyor12 muthiyor13 muthiyor14 muthiyor15

 

 

 

மஹநுவர ஆயுதக்கப்பல் சட்டரீதியானது-பாதுகாப்பு செயலர்-

காலியில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் உள்ள ஆயுதக்களஞ்சியம் சட்ட ரீதியானதே என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். காலியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் கப்பலில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன. எனினும் இந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000ற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக் கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார். காலி துறைமுகத்திலிருந்து 7 கடல்மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த இக்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது. இக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்டவிரோதமான முறையில் நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைப்பு-

2014ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 2ஆல் குறைக்கப்படவுள்ளது. இந்த எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்துக்கும் வழங்கவிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் எம்.பிக்களின் எண்ணிக்கை 7ஆக குறைவடையும். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது 7 எம்.பிக்கள் தெரிவான நிலையில், புதிய பெயர் பட்டியலின்படி இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இரத்தினபுரியில் இருந்து தெரிவாகும் எம்.பிக்களது எண்ணிக்கை 10ல் இருந்து 11ஆக அதிகரிக்கவுள்ளது. எனினும் ஏனைய மாவட்டங்களில் புதிய சீர்த்தித்தத்தின்படி எம்.பிக்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும். இதன்படி மாவட்ட ரீதியான மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த ஆசன சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என தேர்;தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடிவேல் சுரேஷின் இணைப்பாளர் பயன்படுத்திய வாகனம் மீட்பு-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று பசறை லுனுகல மடூல்சீமை கொகாகலவத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மடூல்சீமை காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஊவா மாகாண சபை உறுப்பினர் வடிவேல் சுரேஷின் இணைப்பாளர் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது .பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த இணைப்பாளரும், வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல்போன வாகனங்கள் குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் கத்திக் குத்துக்கு இலக்காகி கணவன் பலி, மனைவி படுகாயம்-

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11.30 அளவில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று வீட்டினுள் அத்துமீறி நுழைந்து கணவன் மனைவி மீது கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் காட்டுப்புலத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவருடைய மனைவியான சு.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக மக்களுக்கு சொந்தக் காணியில் வீடு நிர்மாணிக்க நடவடிக்கை-

மலையக மக்களுக்கு சொந்த காணிகளில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் பத்திரமுல்லையிலுள்ள தனது அமைச்சில் இன்றுகாலை தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இடமற்று தமக்கென முகவரியற்று வாழ்ந்து வரும் மலையக சமுதாயம், தமக்கு என்று ஒரு இடமுண்டு நிறமுண்டு எங்களுக்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு என்ற செல்லக் கூடிய வகையில், அவர்களுக்கு சொந்த காணிகளில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளோம். இதற்கமைய மலையக மக்களுக்கான வீடுகளை 100 நாட்களுக்குள் கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளோம். இதற்கு தோட்ட நிர்வாகங்கள், தோட்ட முகாமைத்துவங்கள், தொழிற்சங்க பிரதிநிகள். தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் கல்வி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மலையகத்தை பிரதிநித்துவப் படுத்தும் ஏனைய இரு அமைச்சர்களுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து ஒன்றுமையுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனுராத ஜயரத்ன பிணையில் விடுதலை-

நடைபெற்று முடிந்த தேர்தலில் பொது எதிரணி வேட்பாளரின் கம்பளை தேர்தல் மேடைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான, மத்திய மாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்னவின் மகனுமான அனுராத ஜயரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருடன் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட உடபாலத்த பிரதேசசபை உறுப்பினர் சுமுது பண்டார, கம்பளை நகர சபை உறுப்பினர் தரங்க விட்டச்சி மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகியோரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டு, பின்னர் கம்பளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது ஒருவரை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி இடம்பெறவுள்ளன. கட்சி அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை, அத்துமீறி உள் நுழைந்தமை மற்றும் துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19வது திருத்தச் சட்டம் இரண்டு வாரத்தில் கொண்டுவரப்படும்-

உத்தேச அரசியல் யாப்பு மாற்ற சட்டமூல ஆவணம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 18வது திருத்தச் சட்டத்தை நீக்க 19வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 19வது திருத்தச் சட்டத்திற்கு தேவையான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 19வது திருத்தச் சட்டத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் காணப்படும் என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.