பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
இதேவேளை, இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சட்டமூலத்திற்கு தாம் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பிரதிகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சபை அமர்வு இன்று முற்பகல் 10மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, சபாநாயகரின் அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டபோதே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில், ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்து, அம்மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளமையானது, பலரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதென,
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டிணன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று உத்தரவிட்டார்.
2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.