சட்டவிரோதமாக தென்கொரியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.