இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்தே, ஊழியர்கள் இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.