Header image alt text

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக நேற்றுமாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான நிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது. புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துள்ளார். சீனத் தூதுவராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசிலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீனப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு அலரிமாளிகையை ஒப்படைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்துள்ளதுடன் அலரி மாளிகைiயில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரதவாளர்கள் என பெருந்தொகையான ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்குள் காணப்படுகின்றனர். Read more

உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் கூட்டத்தொடர் பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் பிற்போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை கூடவிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அந்த பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 51(1) இலக்க சரத்தின் படி அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமரின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read more

பாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து அலரி மாளிகையில் தற்போது விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுமாலை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்துள்ளனர். Read more