Header image alt text

03.10.18 நடைபெற்ற வடக்கு கிழக்கு ஜனாதிபதி அபிவிருத்தி செயலணியில் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறினார். பல நிமிடங்கள் இது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். நிலத்தடி நீரை உறிஞ்சியதால் இந்தியாவில் பல கிராமங்கள் அழிந்தன என பாராளுமன்ற உறுப்பினர் கூறியபோது அதை ஏற்றுக் கொண்ட ஜனதிபதி எத்தியோப்பியா நீர் பஞ்சத்துக்கு காரணம் இதுவே என கூறினார். Read more

03.10.18 செவ்வாய்கிழமை பள்ளியின் ஆசிரியர் திருமதி . சசிகலா தலைமையில் இடம் பெற்றது.
இவ்நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ் தரும், முன்னை நாள் வவுனியா நகர பிதாவும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வவுனியா தெற்கு கல்வி வலய உதவி பணிப்பாளர் திரு.தர்மபால சிறப்பு விருந்தினராகவும், ஒய்வு பெற்ற முன்னாள் கோட்ட கல்வி அருள் வேல் நாயகி , பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். Read more

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்கீழ் யாழ். சங்குவேலி பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு ரூபா 70,000 பெறுமதியிலான தளபாடங்கள் சங்கத்தின் பிரதிநிதி பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் சங்குவேலி இந்து அறநெறி பாடசாலைக்கு ரூபா 100,000 பெறுமதியிலான பிளாஸ்ரிக் கதிரைகள் அறநெறிப் பாடசாலையின் அதிபரும், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய திருமுருகராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. Read more

மாகாணசபை குறித்து குற்றம் சொல்வதற்கு மத்திய அரசிற்கு எந்த அருகதையும் இல்லை என வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கால்நடை அபிவிருத்தி திணைக்கள பயிற்சி நிலையத்தில் ஒன்பது மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிராந்திய பயிற்சி நிலைய கட்டத்தினை 02.10.18 செவ்வாய்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Read more

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் இன்றையதினம் [03.02.2018] கழகத்தின் செயலாளர் பி.கெர்சோன்(கரிஷ்) தலைமையில் வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான க. சந்திரகுலசிங்கம் [மோகன் ] புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் நகரசபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் Read more

வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும் வவுனியா நகரத்தின் பல இடங்களில் எமது உறுப்பினர்கள் இருப்பார்கள் என்ற வாசகங்கள் அந்த துண்டுப் பிரசுரங்களில் இருந்துள்ளன. Read more

யாழ்ப்பாணத்திலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பூநகரி மற்றும் யாழ். போதனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மாடு ஒன்று பாதையின் குறுக்கே சென்றதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read more

2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதுடன், இதனை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றில் ஆஜராகி குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். Read more

மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் செயலாளர்களாக 75 சதவீதம் கடமையாற்றுபவர்கள் குறிப்பிட்ட அமைச்சர்களின் உறவினர்கள் என அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கு நாட்டை முன்னேற்றுவது குறித்த புதிய அபிப்பிராயங்களை வழங்குவதற்கு எவரும் இல்லையென்றும், அந்த சங்கத்தின் செயலாளர் தேசகீர்த்தி அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். Read more