03.10.18 நடைபெற்ற வடக்கு கிழக்கு ஜனாதிபதி அபிவிருத்தி செயலணியில் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறினார். பல நிமிடங்கள் இது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். நிலத்தடி நீரை உறிஞ்சியதால் இந்தியாவில் பல கிராமங்கள் அழிந்தன என பாராளுமன்ற உறுப்பினர் கூறியபோது அதை ஏற்றுக் கொண்ட ஜனதிபதி எத்தியோப்பியா நீர் பஞ்சத்துக்கு காரணம் இதுவே என கூறினார். Read more
03.10.18 செவ்வாய்கிழமை பள்ளியின் ஆசிரியர் திருமதி . சசிகலா தலைமையில் இடம் பெற்றது.
புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
மாகாணசபை குறித்து குற்றம் சொல்வதற்கு மத்திய அரசிற்கு எந்த அருகதையும் இல்லை என வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் இன்றையதினம் [03.02.2018] கழகத்தின் செயலாளர் பி.கெர்சோன்(கரிஷ்) தலைமையில் வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தில் நடைபெற்றது.
வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதுடன், இதனை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் செயலாளர்களாக 75 சதவீதம் கடமையாற்றுபவர்கள் குறிப்பிட்ட அமைச்சர்களின் உறவினர்கள் என அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.