இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

வீர விக்ரம பதக்கம், ரண விக்ரம பதக்கம், உன்னத சேவைக்கான பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ள சவேந்திர சில்வா 1984ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக சேவையில் இணைந்துகொண்டிருந்தார். அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவு பிரதானியாக நியமனம் பெற்றுள்ளார்.