காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்றுகாலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதியை வந்தடைந்தது. Read more
வவுனியா, நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் இடம்பெற்ற, அமரர்கள் நினைவான 22 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் ஜேர்மன் கிளை நிதி உதவி –
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை 24.02.2019 அன்று கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
ளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்கியுள்ளன.
அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
நான்கரை வருடங்கள் ஆகியும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.