ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வட்டுக்கோட்டைத் தொகுதி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிறன்று(10-02-2019) கட்சியின் தொகுதி அமைப்பாளர் ந.கணேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
சித்தன்கேணியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டு தொகுதியின் தேவைப்பாடுகள், அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர். Read more

இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளமை, இலங்கையுடனான உறவினை விருத்தி செய்துக் கொள்வற்கு அடிப்படையான தடையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் திறக்கவுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார்.