இன்று காலை 6 மணி முதல் பயணிகளைத் தவிர ஏனையவர்கள் யாரும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பயணிகளை தவிர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவரும் உட்செல்ல முடியாது. சீனாவில் இருந்து வரும் விமானங்களை வேறு ஒரு பகுதியில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.