பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கு அமைய இலங்கை விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க உள்ளார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை, பாகிஸ்தானின் கடற்படை தளபதி சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன, அரசியலில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்திருந்த மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, கற்பகபுரம் பகுதியில் நேற்றுக்காலை தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
நல்லாட்சியின் நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் நாட்டை விட்டுச் செல்லவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, இந்த அரசாங்கம் பதவியேற்று 60 நாள்களில் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
முதல் முறையாக இலங்கையில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்றையதினம் திறக்கப்படவுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள், இன்று தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியைக் கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவரது கணவரை, பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், இன்று உத்தரவிட்டார்.