விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டவில்லையென குற்றஞ்சாட்டிய யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, எனினும் மேலதிக காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனரெனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ் இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வறியக்கோட்டுக்குட்பட்ட 100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.