இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ (Michael R. Pompeo) விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஜனநாயகத்தை மதிக்கும் பண்பை கொண்டிருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more
இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1079 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.
முல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், நேற்று இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை தற்போதைய நிலையில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்தர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஒலேக் சல்யகோவ், பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது ஆகும். சார்ஸ் நோயின் பலி எண்ணிக்கையை விட கொரோனாவின் பலி எண்ணிக்கை அதிகம் ஆகும்.
வடக்கில் ஏ-9 வீதியை மையப்படுத்தி போதைப் பொருள் கடத்தலை காரணமாகக்காட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.