புதுக்குடியிருப்பின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சி.ஜெயகாந்த், இன்று தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு ஒன்றினை பிரதேச செயலக மண்டபத்தில் நடத்தியுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட பல மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் பெருமளவானவர்களக் கலந்துகொண்டனர்.

2011 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில், புதுக்குடியிருப்பு பிரதேச  செயலாளராக இருந்த சி.ஜெயகாந்த், மாற்றம் பெற்று சென்றும் மீண்டும் இரண்டாவது தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை பெறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.