
Posted by plotenewseditor on 5 June 2020
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 5 June 2020
Posted in செய்திகள்
மலர்வு-1965.10.01 உதிர்வு-05.06.2020
மன்னார் அடம்பன் கன்னாட்டியை பிறப்பிடமாகவும் பெரியகுஞ்சுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் அங்கத்தவர் திரு. பிரான்சிஸ் அருள்தாஸ் (தோழர் அன்ரன்) அவர்கள் இன்று 05.06.2020 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) Read more
Posted by plotenewseditor on 5 June 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 பேர் நேற்று (04) இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில், 42 பேர் கடற்படையினர் எனவும் ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more
Posted by plotenewseditor on 5 June 2020
Posted in செய்திகள்
பல துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லே தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 5 June 2020
Posted in செய்திகள்
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 5 June 2020
Posted in செய்திகள்
மல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவரை காணவில்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். Read more