கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை, ஆகஸ்ட் 15ம் திகதி வரை தாமதப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  அத்துடன், இதுவரை வெளிநாடுகளில் உள்ள 50,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இலங்கை வருவதற்கு

அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, படிப்படியாக அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.