முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் நேற்று (30) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பல துறைகளிலும் சட்ட மறுசீரமைப்பு மற்றும் திருத்தத்திற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், சிவில் சீர்திருத்தத்தில் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நாம் 11 குழுக்களை நியமித்து சட்டம் தொடர்பான திருத்தத்தை மேற்கொண்டு வருகிறோம். எனக்கு தேவையான மாதிரி அப்பம் இறக்குவது போல் ஒரே நாளில் இதனை செய்ய முடியாது. முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கும் குழுவொன்றை நியமித்துள்ளோம். அது எனக்கு மறக்கவில்லை. என்றார்.