நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம் உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும்

சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் இன்று காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பின் தடைகளையும் தாண்டி முன்னேறி வருகின்றது.

பிந்திய செய்திகள் படி 17.00 pm

பேரணி மட்டக்களப்பு வந்தடைந்து தேற்றாத்தீவை அடைந்ததாகவும் தாழங்குடாவில் இன்று பேரணி நிறைவடைந்து நாளை காலை மீண்டும் தொடரவுள்ளது.