Header image alt text

MSC MESSINA என்ற கொள்கலன் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read more

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா பூவரசன்குளம் கிராம அலுவலர் திரு. விஜயருபன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாலிக்குளத்தில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுவிஸ் வாழ் எம் உறவுகளான நந்தன், பெர்ணான்டோ, செல்வம் ஆகிய குடும்பங்கள் கழகத்தின் சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் 33 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1500/= பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன. Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more

கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் 23ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக International Widows’ Day அறிவித்து, 2010ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. Read more

23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக, ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றம் காலை 10 மணிக்கு கூடியது. Read more