Header image alt text

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் உயர்தர பயணிகளுக்கு பிரீமியம் விமான நிலைய அனுபவத்தை வழங்குவதற்காக ‘கோல்டன் ரூட்’ வருகை ஓய்வறை நேற்று திறந்து வைத்தது.

Read more

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Read more

18.08.2001இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குட்டி (செம்பாப்போடி .மேகநாதன்- திமிலைதீவு) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

உலக சந்தையில் எரிபொருள் விலையைப் பார்க்கும்போது உள்நாட்டில் பெற்றோல் லீற்றரை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  உலக சந்தையில் எரிபொருளின் விலை கடந்த காலங்களில் பாரியளவில் அதிகரித்திருந்தாலும், பெரல் ஒன்றின் விலை 120 டொலரில் இருந்து 90 டொலராக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கோட்டாகோகம செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது. இதனையடுத்து, கொழும்பு, கொம்பனி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உள்ள சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக தெரிவிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன. Read more

பிரித்தானிய GSP பிளஸ் சலுகைக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய கட்டண நிவாரணத் திட்டத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதன் மூலம் இலங்கைக்கு பாரிய நன்மை ஏற்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். Read more

அதிநவீன தொழில்நுட்ப கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானத்தை, கடும் அழுத்தங்களைக் கொடுத்து சீனா மாற்றியுள்ளதாக Hindustan Times இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் சீனா இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுத்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்ட வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read more