Header image alt text

The Island newspaper 13.05.2023 Saturday

Posted by plotenewseditor on 15 May 2023
Posted in செய்திகள் 

Tamil leaders optimistic about discussions with President – PLOTE leader
By Dinasena Ratugamage
The recent discussion between the Northern Tamil political parties and president Ranil Wickremesinghe was highly productive, leader of the People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Dharmalingam Siddarthan said.
He added that most issues faced by the Tamil people could be solved during future meetings with the president.Siddarthan said that the Northern Tamil political parties started discussions with the Presidnet on 11 May. Three separate discussions are to be held, he added.

Read more

14.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும்(14). ஒவ்வொரு வருடத்திலும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகமே இன்று அன்னையர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, எமது நாட்டில் 6215 தாய்மார் முதியோர் இல்லங்களில் வசிப்பதாக தேசிய முதியோர் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் போதும் பணி முடித்து திரும்பும் போதும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வது நாளை(15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை நாளை(15) முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள, மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் மூன்றில் ஒரு வீத பஸ்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாக புத்தர் சிலை வைத்தல் மற்றும் அங்கு பௌத்த விகார அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றுமுற்பகல் அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினமும் தொடரவுள்ளது. இந்தச் சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. நேற்றைய தினம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை

Read more

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு 27ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு  வருகை தந்துள்ளனர். இன்று(11) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசனும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். Read more