தோழர் செந்தில் (கந்தசாமி கணேசன்) அவர்கள்
வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும் வைரவப்புளியங்குளம், நொச்சிமொட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தோழர் செந்தில் (கந்தசாமி கணேசன்) அவர்கள் இன்று அதிகாலை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு தோழருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)