மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் இன்று நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். புறக்கோட்டையில் வைத்து பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை போன்ற விடயங்களை முன்வைத்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.