சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். கடல்சார் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வணிகர்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் 100 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடற்படை எஸ்.எம்.எஸ் கஜபாவை இலங்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். Read more