Header image alt text

துறைநீலாவணையில் 12.03.1986இல் மரணித்த தோழர்கள் மாமா (முருகேசு ஸ்ரீதரன் – துறைநீலாவணை-08), கதிரவேல்(விசு), புலேந்திரன்(ரகுபதி), தருமன், தவராசா ஆகியோரின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

12.03.1984இல் மரணித்த தோழர் சாந்தன் (நகுலநாதன் – முருங்கன்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தாய் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த விமான சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளாந்தம் இடம்பெறவுள்ள இந்த விமான சேவையின் ஊடாக சுற்றுலாத்துறை அதிக இலாபம் அடையும் என சுற்றுலா தொழிற்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் தாய் எயார்வேஸ் விமான சேவை, 28 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து சில மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.