இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தாய் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த விமான சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளாந்தம் இடம்பெறவுள்ள இந்த விமான சேவையின் ஊடாக சுற்றுலாத்துறை அதிக இலாபம் அடையும் என சுற்றுலா தொழிற்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் தாய் எயார்வேஸ் விமான சேவை, 28 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.