Header image alt text

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் 6 வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் நினைவாக..
தோழர்.ஆர்.ஆர் எனும் அமரர் நல்லநாதர் பெயரில் அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், செயலதிபரின் நினைவில்லத்தில் “பொதுமக்களுக்கான இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் நிலையம்” எனும் செயல்திட்டம் இன்றையதினம் கழகத்தின் (புளொட்) தேசிய அமைப்பாளர் தோழர்.பீற்றர் அவர்களின் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தோழர்.ஆர்.ஆர் அவர்களின் முப்பத்தியொராம் நாளுக்கு முன்பாக இத்திட்டம் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read more

திருத்தங்களுடன் கூடிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி 24 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் கூடிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூல நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.