Header image alt text

சிவராத்திரி தினமன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்காகசென்றவர்கள் மீதான இலங்கை பாதுகாப்புப் படையினரின் காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 10.03.2024 நடைபெற்றது. Read more

காவல்துறை அதிகாரம் இல்லாத ஏனைய அதிகார பரவலாக்கம் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலையில் இடம்பெற்றதாக கூறப்படும் காவல்துறை அடாவடிதனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தின் காவல்துறை அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பரவலாக்க தயாராக உள்ளதாக கூறுகிறார். Read more

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் நேற்றைய தினம் வவுனியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது பாதணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.