Header image alt text

ஶ்ரீ துர்க்கா முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் வர்த்தக சந்தை நிகழ்வில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் (பா.உ), கட்சியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கெங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Read more

கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. 5.3  கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  இந்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more

பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களது வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி, பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இணைப்புகளுக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அவசர கணினி குற்றத்தடுப்பு பிரிவு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்துமாறு அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. Read more

மொட்டுக் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாளை (30) தங்காலையில் நடைபெற உள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியை மீளக் கட்டியெழுப்பி பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.