Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளரும், சிரேஷ்ட போராளியுமான *தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்)* அவர்களின் நினைவாக, உணர்வுப் பகிர்வுக் கூட்டம் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை லண்டன் Harrow West Conservative Association
10 Village Way,
Rayners Lane,
Pinner
*HA5 5AF. என்னும் முகவரியில் நடைபெற்றது.

Read more

தோழர் RR அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று (25.03.2024) செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கு முன்பு சிரமதானப் பணி இடம்பெற்றது. Read more

2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த தொகை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈ.தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார்? நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரென அவர் தெரிவித்திருந்தார். Read more