மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈ.தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.