முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார்? நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரென அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ளார்.

பிந்தையவை…

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.