தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் 6 வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தங்களது கட்சியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, நளிந்த ஜயதிஸ்ஸ, கலாநிதி.றிஷ்வி சாலி மற்றும் முதித்த நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.