தெற்காசிய பிராந்தியத்தில் விமான பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் உள்ள விருந்தகமொன்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 சிரேஷ்ட விமான போக்குவரத்து நிபுணர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அனுசரணையுடன் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.