தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினம் இன்று வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. வீட்டுக் கிருத்திய கிரியைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தோழர்.ஆர்.ஆர் இன் பெயரில் அவரது குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், ‘பொதுமக்களுக்கான இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் நிலையமும்’ திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அவரது நினைவாக தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு சிற்றுண்டி குளிர்பானம் வழங்கப்பட்டதோடு, மதிய போசனமும் வழங்கப்பட்டது.