பிப்ரவரி 2022 முதல் இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா வசதி நீடிக்கப்பட மாட்டாது எனவும், புதிய வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் குடிவரவு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் அமைச்சர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து 300 முதல் 400 ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர். Read more
சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் தயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். கடல்சார் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வணிகர்கள் மற்றும் மீன்பிடி கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் 100 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடற்படை எஸ்.எம்.எஸ் கஜபாவை இலங்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை கடலில் யாழ்.மீனவர்கள் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய கடல் எல்லைக்கு அருகே சென்று மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகைத்தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம், புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், அடிப்படை உரிமைகள், சட்டவாட்சி, ஜனநாயக ஆட்சி மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக Volker Türk தெரிவித்தார்.
ஜெர்மனிக்கு சொந்தமான MV Sanchuka கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது காணாமற்போன இலங்கையர் தொடர்பில், நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து சம்மேளனத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, அந்த சம்மேளனத்தின் பரிசோதகர் ஒருவர் இலங்கை கப்பல் பணியாளர் பணிபுரிந்த கப்பலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக தேசிய வர்த்தக கப்பல் சங்கத்தின் தலைவர் பாலித அத்துகோரல தெரிவித்தார். இதனிடையே, குறித்த இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வணிகக் கப்பற்றுறை செயலகம் தெரிவித்தது.
தோழர் செந்தில் (கந்தசாமி கணேசன்) அவர்கள்
இந்த வருடத்திற்குள் நடத்தப்படவுள்ள பாடசாலை பரீட்சைகள், அவை நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 06 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரை நடத்தப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையின் (04) பின்னர் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமானதென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக இரு முறைமைகள் பின்பற்றப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். இந்த அறிவிப்பானது நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் வீடொன்றில் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.