நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் கொழும்பு டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடி உரிய தீர்மானம் எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.