வேதன பிரச்சினையை முன்னிறுத்தி இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்றுகாலை 6.30முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் இரத்தினபுரி குருநாகல் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.