ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) எட்டாவது தேசிய மாநாடு-

dplf logo smallஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) எட்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 22ம் நாள் வவுனியாவில் இடம்பெறும்.

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள “ஆதி” திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இவ் மாநாட்டில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து கலந்துகொள்ளவுள்ளதோடு, அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் தற்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மாநாட்டினை நடாத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
2016.05.16