சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய வளாகத்தில் இளைஞர்களுடனான சமகால அரசியல் நிலை தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் மேற்படி ஆலயத்திற்கென பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குத்துவிளக்குகளையும் வழங்கி வைத்தார்.

இதன்போது பண்டத்தரிப்பு பகுதி மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோவும் கட்சியின் செயற்பாட்டாளரும் வட்டுக்கோட்டை பிரதேச இணைப்பாளருமான ந.கணேந்திரன் மற்றும் அப்பகுதி சமூக அமைப்புக்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.